2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அம்பாறையில் குடிசன மதிப்பீட்டுக்கான பயிற்சி

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 07 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 



(அப்துல் அஸீஸ்)

இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவிருக்கும் குடிசன வீட்டு வசதிகள், தொகை மதிப்பீட்டு இறுதி நடவடிக்கைகளுக்காக, கடமையாற்ற உள்ள உத்தியோகஸ்தர்களுக்கு பயிற்சி அளிக்கும்  நிகழ்;வுகள் அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள் மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக நேற்று திங்கட்கிழமை கல்முனை பிரதேச செயலகத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்ட் இப்பயிற்சிநெறி வழங்கும் நடவடிக்கையானது இன்றும் இடம்பெற்றதோடு, இது எதிர்வரும் 16ஆம் திகதி வரை தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது.

புள்ளிவிபர உத்தியோகஸ்தர் எம்.எப்.எம்.மர்சூக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதி தொகைமதிப்பு ஆணையாளரும், பிரதேச செயலாளருமாகிய எம்.எம்.நௌபல் உட்பட பிரதேச செயலக அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • pasha Wednesday, 08 February 2012 03:19 PM

    இந்த பணிக்கும் அரசியல் மூலம் தானா ஆக்கள் தெரிகினம்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .