2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அமைச்சர்களின் நெருக்கமானவர் எனக் கூறி ஏமாற்றிய குற்றச்சாட்டு: அக்கரைப்பற்றில் ஒருவர் கைது

Super User   / 2012 பெப்ரவரி 14 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி, எஸ்.மாறன்)

அமைச்சர்களின் இணைப்பு செயலாளர் என தெரிவித்து பொதுமக்களை ஏமாற்றினார் என்ற குற்றாச்சாட்டின் கீழ் அக்கரைப்பற்றை சேர்ந்த எம்.லாபீர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் எஸ்.பி அஜித் ரோஹன தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

அரச நிறுவனங்களில் தொழில் பெற்று தருவதாக கூறி பொதுமக்களிடமிருந்து பணம் பெற்று ஏமாற்றியுள்ளார் எனவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

அக்கரைப்பற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள இவர், நாளை புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, விவசாய மற்றும் வனவிலங்கு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா ஆகியோரின் இணைப்பு செயலாளர் என கூறிக் கொண்டு  பொதுமக்களிடம் தொழில் பெற்று தருவதாக ஏமாற்றியதுடன் காணி அபகரிப்பிலும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, அக்கரைப்பற்றை சேர்ந்த எம். லாபீர் தனது இணைப்பு செயலாளராக ஒருபோதும் செயற்படவில்லை என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா தெரிவித்தார்.

"குறித்த நபர் தனது அரசியல் மற்றும் கட்சி செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். இதனால் எனது கொழும்பு வேலைகளை மாத்திரம் மேற்கொள்ளவதற்காக நியமிக்கப்பட்டரே தவிர, தொழில் நியமனம் வழங்குவது தொடர்பில் எந்த அறிவுறுத்தலையும் அவருக்கு வழங்கவில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தனது பெயரை கூறி மோசடி செய்துள்ளமையை அறிந்ததையடுத்து, அவருடனிருந்த தொடர்பை நிறுத்தி விட்டதாக மாகாண அமைச்சர் நவரட்ணராஜா மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • UMMPA Wednesday, 15 February 2012 03:10 PM

    rizvi, அஹ்மத் அவர்களின் கேள்வி என்ன என்பதை விளங்கிக்கொள்ளுங்கள். குற்றவாளியாக நீதிமன்றத்தால் தீர்மானிக்காத சந்தேக நபரின் பெயரை வெளியிடுவது ஊடக ஒழுக்கமாகுமா?
    நீதிமன்றம் தீர்ப்பு வந்தால் ஆம் அவர் குடும்ப வரலாற்றை எழுதுங்கள் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.

    Reply : 0       0

    rifnas Thursday, 16 February 2012 03:38 AM

    என்ன கமெண்ட்ஸ் எழுதும் போதே சண்டை போடுறீங்க.

    Reply : 0       0

    pallikkudiruppu peoples Wednesday, 15 February 2012 09:06 PM

    mashaallah ivarai kaithu saiythathu mìhavum athikamana varkaluku mihavum nanmai.

    Reply : 0       0

    resolution Wednesday, 15 February 2012 08:17 PM

    good job.. just take a look at sammanthurai and kalmunai also..

    Reply : 0       0

    neethan Wednesday, 15 February 2012 08:11 PM

    D.J. தமிழ் மிரரும் எனது கருத்தின் முழுவடிவத்தையும் பிரசுரிக்கவில்லை, தூர விலகிய அமைச்சரை பாராட்டுவதுடன், இன்னும் அவரது தொடர்பை துண்டியாது இருப்பவர்களை எவ்வாறு இனம் காண்பது என்று தான் புரியவில்லை.

    Reply : 0       0

    UMMPA Wednesday, 15 February 2012 08:07 PM

    நீங்கள் யார் முதலில் உன் உண்மையான பெயர் என்ன சதர்?

    Reply : 0       0

    ummpa Wednesday, 15 February 2012 07:40 PM

    STR, நீங்கள் என்னுடைய பெயர் தெரிந்து என்ன வாழ்த்தவா போறிங்கள். அப்படியே இருந்துவிட்டு போகட்டும்.

    Reply : 0       0

    pasha Wednesday, 15 February 2012 06:59 PM

    நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டு பெயர் வெளியாவதற்கிடையில் ஆயிரம் தில்லு முல்லுகளை செய்து விடுவார்கள்.

    Reply : 0       0

    DJ Wednesday, 15 February 2012 05:53 PM

    Mr. Neethan, அமைச்சர் நவரட்ணராஜா தனது பெயரை கூறி மோசடி செய்துள்ளமையை அறிந்ததையடுத்து, அவருடனிருந்த தொடர்பை நிறுத்தி விட்டதாக துண்டித்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதை நீங்கள் அவதானிக்கவில்லை போலும்.

    Reply : 0       0

    Nalanvirumpi Wednesday, 15 February 2012 05:09 PM

    அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருக்கிறான்.

    Reply : 0       0

    STR Wednesday, 15 February 2012 04:37 PM

    நீங்கள் யார் முதலில் சொல்லு உங்களுடைய உண்மையான பெயர் என்ன UMMPA?

    Reply : 0       0

    sajana Wednesday, 15 February 2012 04:06 PM

    இதை எழுதிய கட்டுரையாளருக்கு பெயர் வெளியிடுவது புதிய விடயமல்ல. அவருக்கு பெயர் வெளியிடுவதில் பல அனுபவங்கள் உள்ளது. :P

    Reply : 0       0

    Ahamed Wednesday, 15 February 2012 04:53 AM

    இவ்வாறான குற்றச் செயல்களை ஊடகம் மூலமாக மக்களுக்கு தெளிவு படித்தியதிற்கு நன்றி.
    ஆனால் குற்றவாளியாக நீதிமன்றத்தால் தீர்மானிக்காத சந்தேக நபரின் பெயரை வெளியிடுவது ஊடக ஒழுக்கமாகுமா?

    Reply : 0       0

    Mashoor Wednesday, 15 February 2012 02:46 PM

    அவரை குற்றவாளியாக நீதிமன்றம் தீர்மானித்தால் அவரது புகைபடம் பிரசுரிக்க பட வேணும், அப்போதே மக்கள் ஏமாறாமல் இருப்பார்கள். அமைச்சர்களோடு நின்று புகைபடம் எடுத்து விட்டு இணைப்பு செயலாளர் என்போர் விடயத்தில் அமைச்சர்மார் கவனமாக இருக்க வேண்டும். இது சம்பந்தமாக முறைபபாடு வந்தால் கவனமாக நடவடிக்கை எடுங்கள், கடைசி நேரத்தில் தனக்கு தெரியாது என்று சொல்வதை விட...

    Reply : 0       0

    Risvi Wednesday, 15 February 2012 02:42 PM

    @அஹமட், உம்ப்பா,
    இதில் பாதிக்கப்பட்டவர்கள் பலர் முஸ்லிம்கள். அது உங்களுக்கு பரவாயில்லை. ஆனால் ஏமாற்றியதாக கூறப்படுபவர் முஸ்லிம் என்றால் வெளியிடக்கூடாதா? எந்த தரப்புக்கு நீங்கள் ஆதரவு?

    Reply : 0       0

    ummpa Wednesday, 15 February 2012 02:07 PM

    இங்கு சட்டம் முக்கியமில்லை . அவர் முஸ்லிமாக இருந்தால் உடன் பெயர் விலாசத்துடன் பிரசுரித்துவிடுவார்கள். இது tamilmirror க்கு விதிவிலக்கா. உலகமே அதைதான் தினமும் பிரசுரிக்கின்றன.

    Reply : 0       0

    siriththiran Wednesday, 15 February 2012 12:56 PM

    @அஹ்மத், இன்னொருமுறை அவரிடம் மக்கள் ஏமாறாமல் இருக்கட்டுமே ..... பெயருடன் போட்டோ போட்டால் இன்னும் நல்லது நண்பரே ...இது தமிழ், சிங்கள, முஸ்லிம் எல்லோருக்கும் பொருந்தும்.

    Reply : 0       0

    akkaraiooraan Wednesday, 15 February 2012 12:17 PM

    தம்பி லாபீர் நீங்க காட்டின ரூட்டிக்கு, அல்லா காட்டி விட்டான்.

    Reply : 0       0

    neethan Wednesday, 15 February 2012 09:54 AM

    அமைச்சர் நவரட்ணராஜா தொடர்பை ஏற்றுக்கொண்டுள்ளார், மற்றைய அமைச்சர்களது தொடர்பு?

    Reply : 0       0

    shan Wednesday, 15 February 2012 09:08 AM

    ஏன் அவர் பெயரை கூறாமலா இந்த நடவடிக்கையில் இறங்கினார்? அப்பாவிகளை ஏமாற்றும் பொது மட்டும் பெயரில் சட்டதிட்டம் கிடையாது? இது தண்டனையல்ல, ஊடக ஒழுக்கம். குற்றவாளியை காட்டிக்கொடுக்க விட்டால் தான் ...பிழை. இதுதான் சரி என்ன ??

    Reply : 0       0

    Akp Wednesday, 15 February 2012 06:30 AM

    குற்றவாளியானால் கட்டாயமாக தண்டிக்கப்பட வேண்டும்..... அவரின் பெயரை வெளியிட்டதில் எந்த தப்பும் இல்லை என நினைக்கிறேன் .

    Reply : 0       0

    jai shanthiran Wednesday, 15 February 2012 05:34 AM

    அக்கரைபத்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு எமது நன்றிகள்

    Reply : 0       0

    Mashoor Wednesday, 15 February 2012 05:24 AM

    இது போன்ற மோசடிகள் பல ஊர்களிலும் இருகின்றன. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மக்களின் அலட்சிய போக்கே இவர்கள் உருவாக காரணம். கைது படிப்பினையாக இருக்க வேண்டும். இவர் திருந்துவாரா அல்லது மீண்டும் பழைய "புகழ்" ஆக வருவாரா? கைதிலும் "புகழ்".... கொடுத்து வெச்ச மனுஷர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .