Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2012 பெப்ரவரி 15 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
அமைச்சர்களின் இணைப்பு செயலாளர் என தெரிவித்து பொதுமக்களை ஏமாற்றினார் என்ற குற்றாச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட எம்.லாபீர் அக்கரைப்பற்று நீதிமன்ற நீதவானால் இன்று புதன்கிழமை 100,000 ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
அக்கரைப்பற்று நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் அக்கரைப்பற்றை சேர்ந்த லாபீர் அமைச்சர்களின் இணைப்பு செயலாளராக கடமையாற்றினாரா ஏன விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
அக்கரைப்பற்று பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட லாபீர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, விவசாய மற்றும் வனவிலங்கு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா ஆகியோரின் இணைப்பு செயலாளர் என கூறிக் கொண்டு பொதுமக்களிடம் தொழில் பெற்று தருவதாக ஏமாற்றியதுடன் காணி அபகரிப்பிலும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி:
அமைச்சர்களின் நெருக்கமானவர் எனக் கூறி ஏமாற்றிய குற்றச்சாட்டு: அக்கரைப்பற்றில் ஒருவர் கைது
citizen Thursday, 16 February 2012 10:32 AM
லாபீர் அவர்களே
நீங்கள் பிழை செய்திருந்தால் நிச்சயமாக தண்டனையை அனுபவிக்கவேண்டும். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன். ஆனால் நீங்கள் குற்றவாளியல்ல என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் நீங்கள் குறித்த செய்தியை உங்கள் பெயருடன் எழுதியவர்களுக்கு எதிராகவும் வழக்கும் தொடரலாம். ஆனால் ஓன்று மட்டும் உண்மை அல்லாஹ் சரியான நீதியாளன்.
Reply : 0 0
ibnuaboo Saturday, 18 February 2012 12:37 AM
வருமானம் தேடும் ஏமாற்று தொழில் முறை இன்று நாடெங்கும் பரவலாக நடக்கிறது. கையொப்பம் கூட சரியா வராதவர்கள் கொஞ்சம் வாட்டசாட்டமாக இருந்து ,வாய்நிறைய ஜில்மாலா பேசி ஆட்களை நம்ப வைத்து இத்தொழிலை புரிகிறார்கள். துணிச்சல் வேண்டும் மன்னார் அண்ட் கம்பெனி மனேஜர் தங்கவேல் மாதிரி .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
2 hours ago
4 hours ago