2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்துக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 பெப்ரவரி 16 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து, அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்துக்கு ஒரு தொகுதி தளபாடம் வழங்கப்பட்டது.

மேற்படி தளபாடங்களை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு இன்று அறபா வித்தியாலயத்தில் அதிபர் ஏ.எல். கிதுறு முகம்மட் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தளபாடங்களை பாடசாலை அதிபரிடம் கையளித்தார்.

அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேய்க் ஏ.எல். காசிம் மௌலவி, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, பொலிஸ் பரிசோதகர் எம்.எச்.எம்.ஹசீப், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பாடசாலை சமூகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

      

                                                


You May Also Like

  Comments - 0

  • Jeyeroopen Thursday, 16 February 2012 08:33 PM

    நன்றி மிக்க நன்றி. எதிர்கால நம் நாட்டு தலைவகளுக்கு உதவியதற்கு கடந்த கால கசப்பான நிகழ்வுகளை மறந்து எதிர்காலத்தில் சிறந்த தலைவர்களை உருவாக்க எல்லோரும் முயற்சி எடுப்போம்.

    Reply : 0       0

    meenavan Thursday, 16 February 2012 09:18 PM

    நமது வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் எம்.பி.கள் அரசுடன் இணைந்து என்ன செய்கிறார்கள்? அமைச்சர் அதா தான் பிறந்த மண்ணை வளபடுத்தி உள்ளார்,தற்போது சற்று வேகம் குறைவு, ஆனால் மற்றவர்கள்....கதிரை சூடாக்கி அரச வாகனம், தொலைபேசி எரிபொருள் அலவன்ஸ்,பாதுகாப்பு பதுமையாக உள்ளனர்.

    Reply : 0       0

    Nanpan... Thursday, 16 February 2012 11:33 PM

    தம்பி நண்பன், தன்னுடைய மண்ணை வளப்படுத்துவது சேவை மனப்பான்புடன் அல்ல, மாறாக தன்னுடைய அரசியலை பாதுகாப்பதற்காகவே.
    முதல்ல மக்களுடைய உரிமைகளையும், உடைமைகளையும் பாதுகாக்க வேண்டும். அதன் பிறகுதான் அபிவிருத்தி Etc..

    Reply : 0       0

    meenavan Friday, 17 February 2012 04:52 AM

    @Nanpan உரிமை... உரிமை...பாதுகாப்பு, வாழ்வாதாரம் என்று கூறி நமது வாக்குகளை பெற்றவர்கள் எம்.பி.களாகி அமைச்சராகி சோரம் போயுள்ளதை நன்கு அனுபவிக்கிறோம். வார்த்தை ஜாலங்களுக்கும், வீர வசனங்களுக்கும் ஏமாந்ததை விட எதைத்தான் பெற்றுவிட்டோம்?

    Reply : 0       0

    piththan Friday, 17 February 2012 08:38 AM

    meenavan,
    உண்மையை உங்கள் வாயால் சொல்லிவிட்டீர்கள் (அமைச்சர் அதா தான் பிறந்த மண்ணை வளபடுத்தி உள்ளார்)

    அமைச்சர் அதா தான் பிறந்த மண்ணை வளபடுத்த எதுக்கு மற்ற ஊர் மக்களிடம் வாக்கு கேட்க வேணும்.

    Reply : 0       0

    favinitha Friday, 17 February 2012 01:58 PM

    the democratic and competitive politics ever give benefit for public, thanks for new generation efforts to maintain low and order in Addalaichenai, i hope u are the people behind the development of ur area, mean they come down from their position to the leg of people.............. even people know all past events, they teach new lesson again .......... welcome for you..........

    Reply : 0       0

    thala Friday, 17 February 2012 07:55 PM

    பித்தன்.......
    நீங்கள் உங்கள் மனச்சாட்சியை வைத்துச்சொல்லுங்கள்.... நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள்.? இந்த அட்டாளைச்சேனை மண்ணுக்கு இதுவரைகாலமும் யாருடைய சேவை கிடைக்கப்பெற்றிருக்குது ........ தயவு செய்து விதண்டாவாதம் பேசாதீர்கள்....!

    Reply : 0       0

    masoor Saturday, 18 February 2012 12:13 AM

    ஊருக்கு உதுமான் போதும்.

    Reply : 0       0

    Anver M. Mustapha Saturday, 18 February 2012 01:48 AM

    Rear Admiral Sarath Weerasekera is a man with a vision. He is very much better choice, he never hesitates to help other communities. This is one of the good example we can see. During the election time, many so called Muslim Political "Dealers" sorry Leaders were talking communal, now they can learn good lesson from Hon. Sarath Weerasekera.

    Reply : 0       0

    சிறாஜ் Sunday, 19 February 2012 03:11 AM

    யாரோ நல்லது செய்யட்டும்

    Reply : 0       0

    சிறாஜ் Sunday, 19 February 2012 03:15 AM

    யாரோ நல்லது செய்யட்டும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .