2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அம்பாறையில் மண்ணெண்ணெய் மானிய அட்டை விநியோகிக்கும் நிகழ்வு ஆரம்பம்

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 20 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலகரீதியாக மண்ணெண்ணெய் பயன்படுத்தும் வறிய குடும்பங்களுக்கான மாதாந்த மண்ணெண்ணெய் மானிய அட்டைகள் விநியோகிக்கும் நிகழ்வு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதற்கமைவாக கல்முனை பிரதேச செயலக பிரிவில் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் பிரதேசசெயலக மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன், பொத்துவில் பிரதேச செயலகத்திற்கான இவ்வைபவம் பொத்துவில் அல் கலாம் முஸ்லிம் வித்தியாலய மண்டபத்தில் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக் தலைமையில் இடம்பெற்றது.

 

இதில் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாசித் கலந்து கொண்டார். மேலும் இவ்விரு நிகழ்வுகளிலும் இராணுவ அதிகாரிகள், பிரதேச உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் உட்பட பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • Rys Tuesday, 21 February 2012 12:56 AM

    அல்ஹம்துலில்லாஹ் வெரி குட், ஆனால் நவ்பல் இடமிருந்து பாதுகாது கொண்டால் போதும் அந்த பணம் மக்களை சென்றடையும்.

    Reply : 0       0

    bish Wednesday, 22 February 2012 05:47 PM

    நல்ல அரசியல். பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலாட்டுகின்றனர்!

    Reply : 0       0

    ***மல்லிகை சிராஜ்***siro Wednesday, 22 February 2012 06:55 PM

    ஹலோ மானியம் எல்லாம் தேவை இல்லை .... பழைய விலைய விட குறைவா கொண்டு வாங்க. அப்போதான் சரி. பாமர மக்கள் என்ன செய்வார்கள். இவர்களை இப்படி கஷ்டபடுத்த வேண்டாம். நாட்டு மக்கள் எல்லோரும் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும். அப்பதான் நீதி கிடைக்கும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .