Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 22 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்தில் போலியான சாரதி அனுமதிப்பத்திரத்துடன் தனியார் போக்குவரத்து பஸ்வண்டியை செலுத்திய மண்டூரை சேர்ந்த சாரதி ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஜ.எம்.றிஸ்வி இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.
கல்முனை நகருக்கும் மத்தியமுகாம் 13ஆம் கொலனி பிரதேசத்திற்கும் இடையில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் தனியார் பஸ்வண்டியை நேற்று செவ்வாய்க்கிழமை காலை சவளக்கடை வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸார் வீதியில் வைத்து சோதனையிட்டனர்.
இதன்போது சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரத்தில் சந்தேகம் கொண்டு விசாரித்தபோது அது போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சாரதியை பொலிஸார் கைது செய்தனர்.
சிறியரக வாகனம் மட்டும் செலுத்தக்கூடியதான அனுமதிபத்திரத்தில், கனரக வாகனம் உட்பட எல்லா வாகனமும் செலுத்தக்கூடியதாக ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என பொலிஸாரின் விசாரணையில்
தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சாரதியை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ஜ.எம்.றிஸ்வி முன்னிலையில் இன்று புதன்கிழமை ஆஜர்படுத்திய போது இவரை எதிர்வரும் மாச் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி
உத்தரவிட்டார்.
இது தொடர்பான விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago