2025 ஜூன் 26, வியாழக்கிழமை

'வீதி ஒழுங்கு, போக்குவரத்துச் சட்டம்' கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 27 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அக்கரைப்பற்று பொலிஸாரும் - லொயிட்ஸ் சாரதி பயிற்சி நிலையமும் இணைந்து பொதுமக்களுக்கான 'வீதி ஒழுங்கு மற்றும் போக்குவரத்துச் சட்டம்' தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கொன்றினை அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தினர்.

அம்பாறை மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகர் ஏ.எல்.எம்.பாறூக்  இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு வீதி ஒழுங்கு மற்றும் போக்குவரத்துச் சட்டம் தொடர்பில் பங்குபற்றுனர்களுக்கு விளக்கமளித்தார்.

இந்நிகழ்வில் பொலிஸ் பரிசோதகர் எம்.ஏ.எம்.நஜீப், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.ஜி.எம்.சலாம், அம்பாறை மாவட்ட போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி கே.ஆரியரட்ண உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வீதி ஒழுங்கு மற்றும் போக்குவரத்துச் சட்டம் தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்குகளை அக்கரைப்பற்றுப் பொலிஸார் தமது அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • Nafeel Saad Monday, 27 February 2012 11:43 PM

    இலஞ்சம் வாங்குவது எப்படி இல்லாமல் செய்வது எப்படி என்பது பற்றியும் பேசலாமே?

    Reply : 0       0

    meenavan Wednesday, 29 February 2012 05:38 AM

    @Nafeel Saad யாருக்கு யார் பேசுவது?

    Reply : 0       0

    aaayuthan Wednesday, 29 February 2012 05:07 PM

    varumanathai eppadi uyarthuvathu enpathu thane ithuda summary?

    Reply : 0       0

    piththan Wednesday, 29 February 2012 10:47 PM

    மனிசனா திருந்தும் வரை ஒன்றும் செய்ய முடியாது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .