2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மேற்குலகத்தின் சதியினை கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து முறியடிப்போம்: ஹரீஸ் எம்.பி

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 28 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

எமது நாட்டின் நிரந்தர சமாதானத்தை சீர்குலைக்கும் மேற்குலக நாடுகளின் சதி முயற்சிகளை கட்சி பேதங்களுக்கப்பால் ஒன்றிணைந்து முறியடிப்போம் என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பத்தொன்பதாவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவிருக்கும் மனித உரிமை மீறல்கள் குற்றப் பிரேரணையினை எதிர்த்து, அரசுக்கு ஆதரவாக கல்முனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியினை நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்;.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி துல்கர் நயீம் ஆகியோரின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்றது.

ஆர்ப்பாட்ட பேரணியில்  கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், பள்ளிவாசல் சம்மேளனங்கள், வர்த்தக சங்கத்தினர், திணைக்களங்கள், பொது அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள், பாடசாலைகள் மாணவர்கள் மற்றும் சாய்ந்தமருது, கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை ஆகிய ஊர்களின் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட பேரணிக்கு ஆதரவு தெரிவித்து வர்த்தகர்கள் தங்களது வர்த்தக நிலையங்களை மூடி ஒத்துழைப்பு வழங்கினர்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மூன்று சகாப்த காலமாக எமது நாட்டில் காணப்பட்ட பயங்கரவாத சூழ்நிலையினை இல்லாமலாக்கி நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திய ஜனாதிபதிக்கும் தாய்நாட்டுக்கும் எதிராக மேற்குலக நாடுகள் சதிவலையினை பின்னியுள்ளன.

இன்று அதனை மனித உரிமை மீறல்கள் பிரேரணையாக ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பத்தொன்பதாவது கூட்டத்தொடரில் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றன.

இத்தருணத்தில் நாம் அனைவரும் இலங்கை பிரஜைகள் என்ற உணர்வுடன் இன, மத, வேத கட்சி வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றிணைந்து இப்பிரேரணையினை எதிர்ப்பதோடு எமது ஒற்றுமையினை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் காட்டும் ஒரு நிகழ்வாகவே நான் கருதுகின்றேன்.

பயங்கரவாதத்தினால் மிக மோசமாக வடகிழக்கு மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது யுத்த சூழ்நிலை நீங்கி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் எமது மக்களை மீண்டும் ஒரு பயங்கரவாத சூழ்நிலைமைக்குள் தள்ளி எமது நாட்டினை ஒரு வறிய நாடக மாற்றி மேற்குலக நாடுகளிடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளிவிட மேற்குலக நாடுகள் முயற்சிக்கின்றது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளின்றியும், தொழில் வாய்ப்புகளின்றியும், மாணவர்கள் சிறந்த கல்வி வசதிகளின்றியும் அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு மேற்குலக நர்டுகள் மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வாராமல் தற்போது இருக்கின்ற நிம்மதியினைக் கூட இல்லாமல் ஆக்குவதற்கான முயற்சிகவே பார்க்கத்தோன்றுகின்றது.

கல்முனை மாநகரம் இலங்கை முஸ்லிம்களின் முகவெற்றிலையாகும். இன்று எமது நாட்டுக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக ஜெனீவா மாநாட்டில் கொண்டவரப்படவிருக்கும் பிரேரணையினை கல்முனைத் தொகுதிகள் மக்கள் ஒட்டு மொத்தமாக எதிர்க்கின்றோம் என்ற செய்தியினை நாம் சர்வதேசத்திற்கும் அரசுக்கு வெளிப்படையாக தெரிவித்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • வாக்காளன் Wednesday, 29 February 2012 01:27 AM

    உங்களுக்கு வாக்கு போட்ட அஷ்ரப் நகர மக்களின் பிரச்சினையில் ஒரு அக்கறை இருக்கிறதா?

    Reply : 0       0

    கல்முனை குடி மகன் Wednesday, 29 February 2012 01:31 AM

    நானும் கல்முனை தான்.... மக்களின் பிரச்சினைகளையும் கருத்தில் கொள்ளுங்க....

    Reply : 0       0

    meenavan Wednesday, 29 February 2012 02:19 AM

    மேற்குலக சதியினை முறியடிக்க முன்னர், உங்களூரின் அஸ்ரப் நினைவு ஆசுபத்திரி விடயத்தில் மனதை தொட்டு முடிவு எடுங்கள்.

    Reply : 0       0

    சிறாஜ் Wednesday, 29 February 2012 02:41 AM

    இப்படி கதை கதை கேட்டு, கேட்டு பழகிட்டோம்ல எது சொன்னாலும் கணக்கெடுக்க மாட்டோம்ல

    Reply : 0       0

    asver Wednesday, 29 February 2012 02:43 AM

    உங்களுக்கு டயர் போடவும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் தான் தெரியும்.

    Reply : 0       0

    hameed Wednesday, 29 February 2012 04:51 AM

    இவர் இதக்குத்தான் சரி வேறு மக்கள் பிரச்சினை பற்றி பேசுவதற்கு முடியாது.

    Reply : 0       0

    tharumi Wednesday, 29 February 2012 04:51 AM

    ஐயா உங்கள் கூச்சலை பராக் ஒபாமா கேட்பாரா? மேற்கு நாடுகளின் மனிதாபமான உதவிகள் தான் சுனாமியின் பின்னரான நாம் காணும் கட்டமைப்புகள் என்பதை புரியாமலா பேசுகிறீர்கள்?

    Reply : 0       0

    meenavan Wednesday, 29 February 2012 05:11 AM

    உங்களை எம்.பி.யாக்கி, மேயேராக்கி, மீண்டும் எம்.பி.யாக்கியதில் முகவெற்றிலை நகரம் கண்ட பலன்...... முகமும் இழந்து வெற்றியும் இழந்து இயலாமை..... இல்லை இல்லாமை அடைந்து வருவதுதான். தமிழ் மிரர் உள்ளபடியே பிரசுரிக்குமா என்ற ஐயமும் உண்டு.

    Reply : 0       0

    sarithan Wednesday, 29 February 2012 05:13 AM

    மேற்குலக நாடுகள் என்னத்தை சொல்கிறார்கள் என்பது இவைக்கும் புரியல்ல, ஏதோ நாட்டை பிரித்து கொடுக்க சதி செய்வது போல.. நல்லதை தானே சொல்கிறார்கள்? நல்லிணக்க அணைக்குழு அறிக்கையில் நல்லதைதானே சொல்லியிருக்கு. அதை அமுல்பபடுத்த தானே சொல்கிறார்கள். இந்த சாதாரண விசயத்தையே செய்ய முடியாத அரசாங்கத்துக்கு ஆதரவு கொடி பிடிக்கிறார்கள்.

    Reply : 0       0

    ummpa Wednesday, 29 February 2012 06:01 AM

    சட்டத்தரணி ஆச்சே ! போடும் படம் மந்திரி ஆக்க இதுவெல்லாம் எடுபடாது! வங்குரோத்து அரசியல் நாளும் நலமாக இருக்க வாழ்த்துக்கள் !

    Reply : 0       0

    piththan Wednesday, 29 February 2012 07:25 AM

    நாடில எத்தனை பிரச்சினை இருக்கும் போது எல்லோரும் பேசிறத விசயத்த எதக்கு உழில அடிக்கணும்

    அஷ்ரப் நகர் விசயத்தில இப்படி ஒரு ஆர்ப்பாட்டம் எடுப்பாங்களா?

    Reply : 0       0

    ***மல்லிகை சிராஜ்***siro Wednesday, 29 February 2012 04:57 PM

    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் part 1, காணல்ல , part 2 இருக்கு ,part 3 உம் இல்ல .part 4 iruku ............. illathavanka aatharvu tharivikalayaooooooooooooo.

    கல்முனை மக்கள் ஒன்ருபட்டு இன்னும் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தனும் . காரணம் நீங்க kalunka சொல்றன் ..........

    Reply : 0       0

    pasha Wednesday, 29 February 2012 09:53 PM

    ரெண்டு டயர் எரித்து ஆர்பாட்டம் பண்ணினால் மக்கள் வாக்கு போடுவார்கள் என்று தொடர்தும் நினைக்கிறார் போல. இதல்லாம் விட்டு விட்டு மக்களுக்கு ஏதாவது உருப்படியான வேலை செய்ய பாருங்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .