2025 ஜூன் 26, வியாழக்கிழமை

'வியாபார உத்தரவு பத்திரங்கள் வழங்கப்பட்ட கடைகள் சட்டவிரோதம் என உடைக்கப்பட்டமை வேடிக்கையாக உள்ளது'

Super User   / 2012 பெப்ரவரி 29 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை மாநகர சபையினால் பல வருடங்களாக தொழில் புரிவதற்கான வியாபார உத்தரவு பத்திரங்கள் வழங்கப்பட்ட கடைகள் சட்டவிரோதம் என உடைக்கப்பட்டமை வேடிக்கையாக உள்ளது என கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துல்லா தெரிவித்தார்.

மாநகரினை அழகுபடுத்துவதற்காக இக்கடைகள் உடைக்கப்பட்டிருந்தாலும்; மனிதாபிமான முறையில் கையாளப்பட்டிருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

கல்முனை தனியார் பஸ் நிலையத்திற்கு முன்பாக நிரந்தரமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த ஐந்து கடைகளை சட்டவிரோதம் என தெரிவித்து கல்முனை பொலிஸாரின் உதவியுடன் கல்முனை மாநகர சபை ஆணையாளர் லியாகத் அலி தலைமையிலான குழுவினர் கடந்த பெப்ரவரி 22ஆம் திகதி உடைத்தனர்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"கல்முனை மாநகர சபை எல்லைக்குள் இந்த ஐந்து கடைகள் மாத்திரமா சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளன என  கல்முனை மாநகர சபை ஆணையாளரிடம் கேள்வி எழுப்புகின்றேன்.

குறிப்பாக உடைக்கப்பட்ட கடைகள் கலமுனையில் வசிப்பவர்களின் கடைகளாகவே காணப்படுகின்றன. இக்கடைகள் தவிர்ந்த இன்னும் எத்தனையோ சட்டவிரோத கடைகள் இன்னும் ஏன் மாநகர சபையினால்  உடைக்கப்படவில்லை?

உடைக்கப்பட்ட இந்த ஐந்து கடைகளை மாத்திரம் சட்டவிரோதமான கடைகளாகக் கருதும் கல்முனை மாநகர சபை நிருவாகம் இவர்களுக்கு பல வருடங்களாக குறித்த இடத்தில் தொழில் புரிவதற்கான வியாபார உத்தரவு பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.

வியாபார உத்தரவு பத்திரங்கள் வழங்கும் போது இவை சட்டவிரோதமானவை என்பதை அறியாமல் இருந்துள்ளனரா? இக்கடை உடைப்பினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாற்று இடத்தினை வழங்க எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மாநகர சபை  எதேச்சதிகாரமாக உடைத்தமை கண்டிக்கத்தக்க விடயமாகும்.

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் கட்டப்பட்டுள்ள அனைத்து சட்டவிரோத கடைகளையும் இனங்கண்டு பொதுவான அறிவித்தல்கள் வழங்கி மாற்று வழியொன்றினை ஏற்படுத்திய பின்னர் அவற்றை அகற்றியிருக்க வேண்டும்.

அதை விடுத்து குறித்த ஐந்து கடைகளை மாத்திரம் உடைத்த செயலானது மறைமுகமான ஒரு பழிவாங்கும் முயற்சி என நான் கருதுகின்றேன்.

அண்மையில் கொழும்பு, ஓல்கொட் மாவத்தையில் அகற்றப்பட்ட பாதசாரி வியாபாரிகளுக்கு கூட அரசாங்கம் மாற்று இடமொன்றினை ஒதுக்கிக் கொடுத்த பின்னரே வியாபாரிகள் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட இவர்களுக்கு மீண்டும் தொழில் முயற்சியினை மேற்கொள்ள இடங்களை வழங்க கல்முனை மாநகர சபை நிருவாகம் மிக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்" என்றார்.

2011ஆம் ஆண்டுக்கு முன்னர் கல்முனை மாநகர சபை அதிகாரிகளினால்  மேற்பார்வை செய்யப்பட்டு குறித்த கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள வியாபார உத்தரவு பத்திரங்கள்:

 

தொடர்புடைய செய்தி:

சட்டவிரோத கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கையில் கல்முனை மாநகர சபை



You May Also Like

  Comments - 0

  • unkauuran Friday, 02 March 2012 12:38 AM

    உறுப்பினராக இறுக்கின்றீர்கள், ஏன் இந்த சட்ட விரோத கடை உடைக்கும்போது உங்களால் நியாயத்தை சுட்டிக்காட்டி பேச முடியவில்லை? நீங்கள் மாநகர ஆட்சியில் இருந்தும் உங்க ஆரம்ப அரசியலில் முதிர்ச்சியைக் காட்டப்போய் உங்களை ஒதுக்கி விட்டார்களோ?

    Reply : 0       0

    unkauuran Sunday, 04 March 2012 01:55 AM

    உறுப்பினர் அவர்களே! உடைக்கப்பட்ட கடைகளின் தற்காலிக மாநகர பத்திரங்களை வெளியிட்டு மனித நேயம் என்று அரசியல் நடத்தாமல் உங்களால் முடிந்தால் அந்த கடைகளின் சொந்த சொத்துக்காரரின் உறுதிப் பத்திரத்தின் பிரதியை வெளியிட்டு உடைக்கப்பட்ட கடைகள் சட்ட விரோதம் இல்லை என்று உண்மைத்தன்மையை நிருபியுங்கள். அதற்காக நா(ங்கள்)ன் சல்யூட் அடிக்கி(ரேன்)றோம் உங்களுக்கு.

    Reply : 0       0

    mastafir Saturday, 03 March 2012 09:20 PM

    een barakath உங்களுக்கு இந்த முட்டாள்தனமான நினைப்பு .

    Reply : 0       0

    Sinnappulla Saturday, 03 March 2012 08:20 PM

    அது போக போக தெரியும்... ஏனென்றா அதே தொடரில் நிறைய கடைகள் இருக்கு அது மேயரின் கண்ணில் படலியோ... பார்ப்போமே...

    Reply : 0       0

    Billa Saturday, 03 March 2012 06:27 PM

    ஏதோ அரசியலுக்கு வந்திட்டம் நம்ம இருப்ப பலப்படுத்த வேனும் என்று அறிக்கையை சிறுபிள்ளைத் தனமாக விட்டுட்டாரு. விடுங்கப்பா விடுங்க. முதல்வர் அவர்கலோ கல்முனை மாநகரில் நிறைய மாற்றங்களை அபிவிருத்திகளையூம் எதிர்பார்க்கின்றோம். அனுபவமில்லாத சின்ன பையன்களின் கதைகளையெல்லாம் கண்டுகொள்ளாதீங்க...

    Reply : 0       0

    ***மல்லிகை சிராஜ்***siro Saturday, 03 March 2012 04:25 PM

    போங்கப்பா நீங்களும் உங்க அரசியலும் ....
    ஆளுக்கொரு பக்கம் இருந்த இப்படி ஒரு கட்சி குள்ள சண்டைதான் வரும் .. முதல் நீங்க எல்லோரும் ஒன்னாக சார்ந்து ஒரு கொள்கைக்கு வாங்க ....இது ஆளுகொரு கொள்கை .....கட்சி இல் இருபவர்கள் எல்லோரும் அப்படி தான் இருக்கிங்க ............... நீங்க மாறுங்க அபிவிருத்தி தானாக வரும் he he he ........ io io

    Reply : 0       0

    sainthamaruthuran Saturday, 03 March 2012 03:03 PM

    சுயநல அரசியல் வாதிகள் இருக்கும் பொது எதனையும் செய்ய முடியாது.

    Reply : 0       0

    neethiyudayaan Friday, 02 March 2012 10:32 PM

    யதார்த்தத்தை புரிந்து கொள்ள முடியாத முட்டாள்களாக இருப்பது ஏன்? கையில் பலம் கொண்டவர்கள் நினைத்த இடத்தில் நினைத்த மாதிரி வியாபார ஸ்தலம் அமைக்க முடியூமாக இருந்தால் இந்த மாநகரத்தின் நிலை என்ன. அன்று இருந்தவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பதற்காக அசிங்கங்களை எம்மத்தியில் வைத்துக் கொள்வதா?. அசிங்கம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளாதவர்களிடம் பேசிப் பயனில்லை. Billa மக்களுக்கு செய்யப்படும் அநீதியாக சட்டவிரோத கடைகளை அகற்றுவதை கருதுவதானது சரி என்றால் நானும் ஒரு மீன் கடையை மக்கள் வங்கி முன்னால் அமைந்துள்ள படகுக் கோபுரத்திற்கு அருகாமையில் அமைக்கலாம் போல..

    Reply : 0       0

    neethan Friday, 02 March 2012 08:51 PM

    @Billa மாநகரின் தென் எல்லையிலிருந்து, ஊர்களின் உள்வீதிகளினூடாக துவிசக்கர வண்டியில் வடஎல்லை வரை பயணம் செய்தால் நம்மவர் வாழும் பகுதி வடிகான்களும், வீதிகள் வாசல் படியினால் குறுக்கப்பட்டுள்ள தன்மை புரியும். இதை பரகத் திருத்த புறபட்டால் அடுத்த தேர்தல் அவருக்கு .....? ஒரு செய்தி சொல்கிறேன் Statesman think about next generation politician think about next election. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்காத மக்களுக்கு அடுத்த தேர்தலை எதிர்பார்பவர்கள் தானே அதிகாரிகளாக வரமுடியும்.

    Reply : 0       0

    riyas Friday, 02 March 2012 08:33 PM

    மாளிகாவத்தைப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்காக அதிகாரிகள் நேற்று சென்றபோது, அப்பகுதி குடியிருப்பாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலை இங்கும் ஏற்படாமை குறித்து சந்தோஷ படுங்கள். neethiudayaan சம்பந்தம் இல்லாத முதல்வரை இதற்குள் இழுக்க வேண்டாம். இதற்கு அதிகாரிகள் பதில் சொல்லவேண்டும்.

    Reply : 0       0

    Billa Friday, 02 March 2012 07:19 PM

    meenavan , neethiudayaan போன்ற குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்கள் உள்ளவரை எந்த அரசியல் வாதியும் இனி மக்கள் பிரச்சினையில் தலையிட மாட்டார்கள் போல் தெரிகிறது.. மக்களுக்கு சார்பாக ஏதாவது செய்தாலும் கதைக்கிறார்கள் செய்யா விட்டாலும் கதைக்குரார்கள் (கிணற்ற்று தவளைகல் முதலில் வீதிக்கு வர வேண்டும் )........
    மக்களால் செய்யப்படும் அநீதிகள் , குற்றச்செயல்கள், போன்றவை மக்களாகவே திருத்திக்கொள்ள வேண்டும் இதற்கு அரசியல் வாதிகள் மாத்திரம் பொறுப்பல்ல (உதாரணம் மீனவனின் வீதியில் வீட்டுப்படிகள் , கான்களுக்குள் குப்பை போடுதல் போன்றவை.... )
    மக்களுக்கு செய்யப்படும் அநீதிகள் மக்களின் பிரதிநிதிகள்தான் தீர்த்து வைக்க வேண்டும் அதைத்தான் பறக்கத் அரசியல் சுயநலத்துக்கு அப்பால் அதனை செய்துள்ளார் என்று நினைக்கிறேன் ... சுடலை ஜானம் உள்ள அரசியல் வாதிகளின் வாரிசுகள் இவ்வாறு பேசுவது முட்டாள் தனமாகத்தேரிகிறது....

    Reply : 0       0

    thala Friday, 02 March 2012 07:59 AM

    mr . neethiudayaan ஏழை தொழிலாளர்களின் வயிற்றில் அடித்த செயல் பாராட்டக் கூடியதா?????

    Reply : 0       0

    neethiyudayaan Friday, 02 March 2012 06:03 AM

    கடைகள் உடைப்புக்கு பின்னணியாக உள்ள சக்திகளை தேடித்தான் பார்ப்போம் வாருங்கப்பா. பாதிக்க பட்டவர்களை பற்றி கொஞ்சமாச்சும் சிந்தித்து பேசுங்களேன்.

    Reply : 0       0

    abnaas mkm Friday, 02 March 2012 01:49 AM

    கல்முனை மார்க்கட்டில் மூடப்பட்டுள்ள புக்ஸ் வீதி கடைகளை மேயர் உடனடியாக உரியவர்களுக்கு கையளிக்க வேண்டும்.

    Reply : 0       0

    riswan Wednesday, 29 February 2012 10:53 PM

    கல்முனையை கேலிக்கூத்தாக்க வேண்டாம். அரசியல் கல்முனையில் முத்திவிட்டது..

    Reply : 0       0

    neethiudayaan Thursday, 01 March 2012 09:52 PM

    கல்முனை மாநகரினை அழகுபடுத்த நினைக்கும் மேயருக்கு மாநகர உறுப்பினர்களாகிய நீங்கள் ஒத்துழைப்பதில்லையா? அழகை ரசிக்க மட்டும் தெரிந்தால் போதாது. அழகுபடுத்தவூம் தெரியவேணும். அட்டையை தூக்கி மெத்தையில் வைத்தால் எப்படி? முதல்வரின் முயற்சி பாராட்டத்தக்கது.

    Reply : 0       0

    pasha Thursday, 01 March 2012 09:33 PM

    இங்கு மாநகரசபை எடுத்த நடவடிக்கையை விமர்சிப்பதை விட இவ் உறுப்பினர் சுட்டி காட்டியுள்ள ஒரு உண்மை பற்றி சிந்தியுங்கள் இம்மாநகரசபை ஏன் பணக்காரர்கள் கட்டியுள்ள சட்டவிரோத இடங்களை அகற்றுவதில்லை? ஏழை மக்களின் வியாபாரத்தில் மட்டும் நடவடிக்கை ஏன்? குளத்தை மூடி கட்டியுள்ள சட்ட விரோத கட்டடங்களுக்கு யார் பொறுப்பு?

    Reply : 0       0

    neethiudayaan Thursday, 01 March 2012 03:48 PM

    எல்லோரும் எல்லா சந்தர்ப்பங்களிலும் அரசியல் இலாபம் தேட முனைந்தால் எப்படி? மாநகர சபையினால் வழங்கப்படுகின்ற வியாபார அனுமதிப்பத்திரத்தினை மாநகர சபையானது எச்சந்தர்ப்பத்திலும் இரத்துச் செய்ய முடியூம் என்பதை அவ்வனுமதிப்பத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளளதை பறகத் அவர்களினால் வாசித்து விளங்க முடியவில்லையோ?

    Reply : 0       0

    m.i.samsudeen Thursday, 01 March 2012 12:08 PM

    பறக்கத் பல உண்மை சம்பவங்களை வெளிக்காட்டி இருக்கின்றீர்கள். நன்றி உங்களை போல விடயம் விளங்கியவர்கள் இன்னும் வர வேண்டும்.

    Reply : 0       0

    mohamad sujan Thursday, 01 March 2012 05:49 AM

    என்ன செய்வது? பாதிக்கப்பட்டவர்களுக்கு கடைகளை பெற்று கொடுக்க வேண்டும் என மிக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏ.எம்.பறக்கத்துல்லா வை நான் கேட்டுக் கொள்கின்றேன் நன்றே........ நடக்குமே .

    Reply : 0       0

    Abdul lateef Thursday, 01 March 2012 05:07 AM

    பல கடை அறைகள் மோசடியாக பணம் பெறப்பட்டு மாட்டப்பட்டுள்ளது. பரகத் மெம்பெர் கவனத்தில் கொள்வாரா ? . .

    Reply : 0       0

    riyas Thursday, 01 March 2012 04:38 AM

    இவராச்சும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடைகளை பெற்று கொடுக்க முயற்சி செய்யட்டும் விடுங்கப்பா.

    Reply : 0       0

    Rahman Thursday, 01 March 2012 04:09 AM

    என்ன செய்வது? சிங்கம் இருக்க வேண்டிய இடத்தில் இன்று அசிங்கங்கள் எல்லாம் நிறைதுள்ளது .

    Reply : 0       0

    asver Thursday, 01 March 2012 03:57 AM

    அவராச்சும் அறிக்கை விட்றாரு. உங்க எம்பி என்ன பண்றாரு?

    Reply : 0       0

    N Thursday, 01 March 2012 03:37 AM

    மனிதாபிமானமாக என்ன சொல்ல வாரியள் நீங்கள் இருவரும்?

    Reply : 0       0

    unkauuran Thursday, 01 March 2012 01:16 AM

    மீனவன் சொன்னமாதிரி எல்லாம் தற்காலிக பத்திரமே! சும்மா ஆளுக்கொரு அரசியல் கல்முனையில் நடக்கிறது. மாநகரை ஆளும் கட்சியில் இருந்துகொண்டு உங்களால் பேசமுடியாமல் சும்ம அறிக்கை விடாதீர்கள்...

    Reply : 0       0

    meenavan Thursday, 01 March 2012 12:07 AM

    உங்கள் கருத்தில் சில உண்மைகள் இருப்பினும், நீங்கள் பிரதிநித்துவம் செய்யும் கட்சி தான் மாநகரசபையை ஆட்சி செய்தது, பற்றுசீட்டு ஒன்றில் தற்காலிகம் என்றே வழங்கபட்டுள்ளதை காணவில்லையா? மாநகர அபிவிருத்தியில் இவை தவிர்க்க முடியாது, நீங்கள் வாழும் வீதியின் வடிகான் உடைந்த நிலையிலும், வீதி வாசல் படிகளினால் குறுக்கப்பட்டு போக்குவரத்துக்கு இடைஞ்சலாய் இருப்பதை அறியாமல் உள்ளது வியப்பாக உள்ளது. 19 கடைகளில் சிலவற்றை அதிகாரத்தை பயன்படுத்தி பாதிக்கபட்டவர்களுக்கு வழங்க முயற்சிக்கவும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .