Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2012 மார்ச் 01 , மு.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த ஒருவரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் உத்தரவிட்டார்.
கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மேற்படி நபர் நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே பொத்துவில் நீதிபதி இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
திருக்கோவில் பொலிஸ் பிரிவில் உள்ள தம்பிலுவில் பிரதேசத்தில் ஒரு கிராம் கஞ்சா போதைப்பொருளை மேற்படி நபர் வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை போதைப்பொருளுடன் மேற்படி நபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago