2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வெற்றுக்காணியிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 07 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவின் கீழுள்ள தம்பிலுவில் பிரதேசத்திலுள்ள வெற்றுக்காணியொன்றில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் சில நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மீட்கப்பட்டதாக அம்பாறை விசேட பொலிஸ் பிரிவு
பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அம்பாறை விசேட பொலிஸ் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து,  தம்பிலுவில் பிரதேசத்திற்குச் சென்று  பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

தம்பிலுவில் மயானப் பிரதேசத்திற்கு அருகிலுள்ள வெற்றுக்காணியிலுள்ள கிணற்றுக்கு அருகில்  பொலித்தினால் சுற்றி  மறைத்து வைக்கப்பட்ட ரி - 56 ரக துப்பாக்கியொன்றும் அதற்கான 69 ரவைகள்,  4  மகசீன்கள் மீட்கப்பட்டன.

இது தொடர்பான விசாரணை அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரணகல பிரேமலால் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .