2025 ஜூன் 26, வியாழக்கிழமை

லயன்ஸ் கழக உத்தியோகத்தர்களுக்கு செயலமர்வு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 08 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

சர்வதேச லயன்ஸ் கழகத்தின் மாவட்டம் 306 – சீ - 2 கழகத்தின் அனுசரணையுடன் கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் கல்முனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, அம்பாறை கல்லோயாவெலி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த லயன்ஸ் கழக உத்தியோகத்தர்களுக்கான பிராந்திய தலைமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி செயலமர்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் லயன் கே.பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வளவாளர்களாக லயன்ஸ் கழகத்தின் குளோபல் தலைமைத்துவ பயிற்;சிப்பிரிவின் இணைப்பாளர்களான லயன் பேனாற் கம்லத், லயன்ஸ் கழகத்தின 2ஆவது பிரதி ஆளுநர் லயன் லசந்தபெரேரா, லயன் எம்.வை.ஏ.சக்கூர், லயன் ஹஸீம், ஆளுநர் சபையின் பொருளாளர் லயன் ஹரிச்சந்திரா, வலயத் தலைவர் லயன் எஸ்.தைரியராஜா உட்பட மாவட்ட ஆளுநர் சபையின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .