Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2012 மார்ச் 13 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபிற்கும் தமிழ் வர்த்தகர்களை அதிகமாக கொண்ட கல்முனை ஜக்கிய வணிகர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று திங்ட்கிழமை மேயர் செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது வர்த்தகர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் மாநகர சபை உறுப்பினர்களை கொண்டிராத பிரதேசங்களில் செயலற்றிருக்கும் தெரு மின் விளக்குகள் மற்றும் வடிகான்கள் தொடர்பாக மேயரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்த பிரச்சினையை நேரில் வந்து பார்வையிட்டு தீர்வினை மேற்கொள்வதாக மேயர் உறுதியளித்தார். இச்சந்திப்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இதற்கிணங்க, மேயர் சிராஸ், மாநகர ஆணையாளர் ஜெ.லியாகத் அலி, தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் மற்றம் மின் தொழிலாளி உள்ளடங்கிய குழுவினர் குறித்த வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் தமிழ் பிரதேசங்களுக்குச் விஜயம் மேற்கொண்டனர்.
இதன்போது, செயலிழந்திருந்த மின் விளக்குகள் மற்றும் வடிகான்கள் என்பவற்றை பார்வையிட்டதுடன் வடிகான்களை திருத்துவதற்கான செலவீனங்களை கணிப்பிடுமாறும் தெரு மின் விளக்குகளை திருத்துமாறும் உத்தரவிட்டார்.
kulathooran Tuesday, 13 March 2012 11:11 PM
முகவெற்றிலை தொகுதி எம்.பி.யையும் இவ்விடயத்தில் இணைத்து உங்கள் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாதா? அண்மையில் அமைச்சர் பசிலினால் தொகுதிக்கு 75.7 மில்லியன் ஒதுக்கப்பட்டதை அறிவீர்கள் தானே. வடிகான்களில் அக்கறை எடுப்பது போல "கேட்வே" யிலும் அக்கறை....? பதவி ஏற்று ஆறு மாதம் நிறைவினை.... அடையவுள்ளீர்கள்.
Reply : 0 0
jes Wednesday, 14 March 2012 01:10 AM
Mr, Kulathooran, உங்களுக்கு ஏன் அவ்வளவு அக்கறை கேட்வே பற்றி , கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கோ.
Reply : 0 0
Rinos Wednesday, 14 March 2012 05:22 PM
Mr. kulathooran,, நீங்கள் ஏன் எந்த comment ஐ எடுத்தாலும் Gateway , gateway என்று இருக்குறீர்கள் ? அதை விட முக்கியமான எவ்வளவோ விடயங்களை முதலில் நடைமுறை படுத்த விடுங்களேன்.. நமது மாநகரில் எத்தனை clubs, shops, associations or companys அனுசரணையில் அந்த gateway ஐ திருத்தி (அது road அகலும்போது இடிக்க வேண்டும் so அதை இன்னும் அகட்ட வேண்டும்.) வடிவமையுங்கள். அதற்கு உரிய நடவடிக்கை எடுங்கள்.
Reply : 0 0
kulathooran Wednesday, 14 March 2012 07:22 PM
@jes நமது மாநகரில் நமக்கு அக்கறை இருக்கக்கூடாதா? இதுவரை இவ்விடயத்தில் ஏழு கருத்துகள். தமிழ் மிரரில் 2011.10.19 ல் தொடங்கி இன்றுவரை பாருங்கள் புரியும் உங்களுக்கு புரியாவிடில் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. முழித்துக்கொண்டு தூங்குபவராக பாசாங்கு பண்ணுபவரை எழுப்ப முடியாது தானே? ஆனால் "கேட்வே" ஆடை உடுக்கும் வரை இது பற்றி தமிழ் மிரர் அனுமதித்தால் தொடர்ந்து வரும்.
Reply : 0 0
kulathooran Wednesday, 14 March 2012 07:54 PM
Mr.Rinos மாநகர தென் எல்லையை வரையறை செய்யவே Gateway, எப்போது road அகலும் 50 வருடங்களின் பின்னர்......?,அதற்க்கு முன்னர் நமதூரின் ஆடையகங்களின் உரிமையாளர்கள் வடிகான்களின் மீதே கடைகளின் படிகளை இட்டுள்ளனர் .அதை உடைப்பதற்கு மேயரின் மூலமாக நடவடிக்கை எடுங்கள்.
Reply : 0 0
pasha Wednesday, 14 March 2012 08:39 PM
gateway contractors are waiting for that to be completed.
Reply : 0 0
nee Thursday, 15 March 2012 03:56 AM
கேட் வே விடயத்தில் நான் kulathooran உடன் நிற்கின்றேன். Rino யாரு மேயாரா? கேட் வேக்கு விளக்கம் சொல்ல? எந்த நிதியில் இருந்து புதிய கேட் வே கட்டபோரியள்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
4 hours ago
4 hours ago