Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2012 மார்ச் 18 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக எதிர்காலத்தில் தமிழ் இனத்தை சேர்ந்தவர் வந்தால் ஏற்றுக்கொள்வோம் என தேசிய காங்கிரஸ் அறிவித்துள்ளது.
"முதலமைச்சர் தெரிவென்பது மக்களாளேயே மேற்கொள்ளப்பட்ட வேண்டும். அதனை யாரும் சூடாக்க கூடாது. கிழக்கு முதலமைச்சர் முஸ்லிமா அல்லது தமிழரா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்" என தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸின் விசேட மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
"கிழக்கு மாகாணத்தில் தற்போது மூன்று இனங்களும் ஒற்றுமையாக வாழ்கின்றன. இந்நிலையில், மாகாணத்தில் செல்வாக்குடைய மக்களின் ஆதரவை பெற்ற எவரும் முதலமைச்சராக வர முடியும். அவர் முஸ்லிமாகவோ அல்லது தமிழராகவோ அல்லது சிங்களவராகவோ இருக்க முடியும்.
தமிழ் முதலமைச்சர் என்றோ அல்லது முஸ்லிம் முதலமைச்சர் என்றோ உணர்வு ரீதியாக கோருவதன் மூலம் அரசியல் காரணமாக இன ரீதியான பிளவுகள் மீண்டும் உருவாகலாம்" என்றார்.
addalaichenai farook Tuesday, 20 March 2012 04:01 AM
மாநாடு நடத்துற காச எடுத்து எங்கட ஊருக்கு லைட்டு போடலாமே, ரெண்டு வோட் ஆவது போடுவோம்.
Reply : 0 0
meenavan Wednesday, 21 March 2012 04:25 AM
@AKP கடலில் இருப்பதால வெளியுலகம் தெரியல்ல, குளத்தில இரிக்கிற உங்களுக்கு வெளியுலகம்....? எங்கள் தலைவர்கள் என பீற்றி கொள்பவர்கள் எனும்போதே...SLMC இனரும் அதனுள் அடங்குவர் என்பதை புரிந்து கொள்ளமுடியாத அறிவுதான் உங்களது அந்த ....அறிவு, கடிவாளம் மட்டுமல்ல மூக்கனாம் கைறும் இடப்பட்டுள்ளது, Nilavan கருத்தையும் மீண்டும், மீண்டும் படியுங்கள்.
Reply : 0 0
MR.JANEEFER Wednesday, 21 March 2012 12:07 AM
தம்பி AKP ஒங்கட விஷயம் எங்களுக்கு தெரியும் . நீங்க வெளி ஊர்களுக்கு போய் AKP பற்றி கேட்டு பாருங்கோ அப்பதான் ஒங்களுக்கு விஷயம் விளங்கும்.
Reply : 0 0
Dr.ANAS Tuesday, 20 March 2012 11:39 PM
கூட்டம் சேர்த்தவர்கள் எல்லாம் வெல்ல முடியாது. தவம் அவர்களுடன் இருக்கும் கூட்டம் தானா சேர்த்த கூட்டம், அன்பாள சேர்த்த கூட்டம்,
Reply : 0 0
Dr.ANAS Tuesday, 20 March 2012 11:17 PM
AKP அவர்களே யாருக்காவது நாம் Support பன்னுவதுக்கு முதல் அவரால் நமக்கு இலாபம் உள்ளதா என பார்க்க வேண்டும் . இலாபம் இருந்தா சுய நலம், இலாபம் இல்லாட்டி Support பன்னுவது நியாயம்.நீங்க எந்த ரகம் (Which category) ?
Reply : 0 0
JIHA Tuesday, 20 March 2012 04:47 PM
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக எதிர்காலத்தில் தமிழ் இனத்தை சேர்ந்தவர் வந்தால் ஏற்றுக்கொள்வோம் என தேசிய காங்கிரஸ் அறிவித்துள்ளது.-இதை இவர் மட்டுமல்ல எல்லாரும்தான் ஏற்கவேனும்... இது என்ன புதுகத.பாவம் இன்னும் பச்சபிள்ளையாவே இருக்கார்.
Reply : 0 0
சிறாஜ் Tuesday, 20 March 2012 04:23 PM
ஜெனிவாக்கு போன ரவூப் ஹக்கீம், றிஷாட் எல்லாம் நல்லா ஆங்கிலம் பேசுவார்கள்... நல்ல சட்டத்தரணிகள்... எதுக்கு யார் சரியோ அதுக்குத்தான் பயன் படுத்தலாம்...
Reply : 0 0
Maravan Tuesday, 20 March 2012 02:03 PM
அடுத்த கிழக்கு மாகாண முதல்வர் கூட்டணி தமிழன் தான் என்பது புரிந்ததா
Reply : 0 0
fowsul Tuesday, 20 March 2012 06:24 AM
முஸ்லிம், இந்து என்று பிரிக்க வேண்டாம்... எல்லாரும் தமிழர் தான்... இல்லை எனில் முஸ்லிம்கள் அரபி பேச வேண்டும்...!!!!!!!!!!!!!!!!!!
Reply : 0 0
akp Wednesday, 21 March 2012 06:34 AM
@Dr.Anas.....
வைத்தியரே...சில நபர்கள் தன்னலம் & சுயநலம் அற்றவர்கள் ......, நல்ல கருத்தை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்பவர்கள் , BZ சிறந்த தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும் பிரதேச வாதம் இன்றி .....(I mean thy should not consider about thier area & political party ).
Thavam...???? he knows how to play but he is not suitable for lead the people(Hidden truth).
Reply : 0 0
Fowsul Tuesday, 20 March 2012 03:57 AM
யார் வந்தாலும் சாமானுக்கு விலை அதிகம் ..... அதிகமே..............
Reply : 0 0
mr.mi sayeer Tuesday, 20 March 2012 03:55 AM
தமிழர்களுக்கு முதலமைச்சு பதவி கொடுக்க நினைக்கும் நீங்கள் கார்பெட் வீதியை முஸ்லிம் எல்லையோடு நிறுத்தியது ஏன் ?
தமிழர்கள் பகுதிகளுக்கும் போட்டிருக்கலாமே ?
Reply : 0 0
AKP Tuesday, 20 March 2012 03:46 AM
@Dr.Anas....
i agree with u, all LLB & NDT 's are there..but wht thy have done there ?? i am sorry to say ....." Leaders has no Titiles", but he is a charismatic leader ....
Reply : 0 0
AKP Tuesday, 20 March 2012 03:41 AM
@mennavan....
தம்பி.....என்னுடைய முழுக்கருத்தும் அங்கு வழங்கப்படவில்லை........,நிர்வாகத்தினரால் ....,
எனக்கி தெரியும் நீங்க ஆழ் கடல்ல இரிக்கரதால்தான் வெளியுலகம் தெரியாமல் இரிக்கயள்....., ஏன் SLMC அமைச்சர்களால் நுரைச்சோலை & அஸ்ரப் நகர் பிரச்சினையை தீர்க்க முடியாது ??
Athaullah என்கிற காட்டுக்குதிரைக்கி கடிவாளம் தேவையில்லை ராசா ......
Reply : 0 0
S.M.SAFEES Tuesday, 20 March 2012 03:37 AM
மாகாண சபை மினிஸ்டர் உதுமா லெப்பே அவர்களை மாநாட்டில் காணவில்லையே?
Reply : 0 0
Nilavan Tuesday, 20 March 2012 02:19 AM
ஐயா, இப்ப இருக்கிற முதலமைச்சரை யார் தெரிவு செஞ்சாங்க? மக்களா? ஜனாதிபதியா?.
Reply : 0 0
mohammed abdullah Tuesday, 20 March 2012 02:08 AM
நன்றாக அரசியலில் உழைக்க தெரியும்.
Reply : 0 0
jeniefar Thursday, 22 March 2012 04:59 PM
உங்கள் அமைச்சர் ஏன் தீக்கவாப்பி பிரச்சினை தொடர்பாக மாநாடுகளோ அல்லது கட்சி மீடிங்கோ நடத்தவில்லை? என் இனிய நண்பரே [அகப் ] முஸ்லிம் பிரச்சினை தொடர்பாக பேச முடியாமல் போனது ஏன் ?
Reply : 0 0
Dr.Anas Friday, 23 March 2012 01:35 AM
@AKP
இறைவன் மனிதனுக்கு பதவியையும் , பணத்தையும் தண்டனை ஆகத்தான் கொடுப்பன். அதுமட்டுமல்ல AKP சுயநலமான தெரிவுக்கும் இறைவன் இடத்தில் தண்டனை உண்டு?
Reply : 0 0
DR.Anas Friday, 23 March 2012 01:10 AM
@AKP
அய்யா அதாவுல்லாஹ் என்ற வார்த்தைய விட்டா உங்களுக்கு வேறு எதுவும் தெரியாதா?
Reply : 0 0
AKP Thursday, 22 March 2012 11:24 PM
@ All.....
யார் யார் எதை சென்னாலும் Athaullah வின் உயர்வையும் & வெற்றியையும் பிற அமைச்சர்களால் தடுத்து நிறுத்த முடியாது......... (இறைவன் மனித மனங்களை அறிபவன்- கபட நாடகம் ஆடி வாக்கு கேட்பவர்களின் நிலைமை கட்சி கட்சி யாக கையேந்தியுள்ளார்கள்)
Reply : 0 0
Dr.Anas Thursday, 22 March 2012 08:05 PM
@akp
சொந்த உழைப்பு . I am really appreciating you. This is not joke ya……..
Reply : 0 0
manaas Thursday, 22 March 2012 07:54 PM
@akp
There is no link @ ur comment, pls check ur votes.
Reply : 0 0
manaas Thursday, 22 March 2012 07:21 PM
Jeneefer ஒரு சிலருக்கு முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வந்தால் எங்கே தன்னை முந்தி விடுவானோ என்று பயம்.
Reply : 0 0
jeneefar Thursday, 22 March 2012 05:38 PM
தமிழர்களுக்காக முஸ்லிம்கள் சென்ற முறை விட்டு கொடுத்ததை போன்று இம்முறை தமிழர்கள் விட்டுக் கொடுப்பதில் பிரச்சினை ஒன்று இருப்பதாக எமக்கு தெரியவில்லை. அது மட்டுமல்ல கிழக்கு மாகான சனத்தொகை கணக்கெடுப்பின் படி முஸ்லிம்களின் அளவு அதிகமாக உள்ளது . எனவே ஒரு முஸ்லிம் முதலமைச்சராக வரலாம் என்பதில் எந்த விதமான ஒரு பிரச்சினையும் இல்லை. எனவே முஸ்லிம் அதிகாரம் எமக்கு கட்டாயம் மாகான சபை மூலம் எமக்கு தேவை அதற்கு முயற்சி செய்யுங்கள் அதை விட்டுட்டு என்னமோ பேசுகிறார் உங்கள் அமைச்சர். இது தேவையா என் அருமை நண்பர் அகப்.
Reply : 0 0
jeneefar Thursday, 22 March 2012 05:06 PM
போலீஸ் காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படுமாக இருந்தால் முஸ்லிம்களின் நிலை பற்றி உங்கள் அமைச்சர் என்ன நினைக்கிறார்?
Reply : 0 0
சிறாஜ் Tuesday, 20 March 2012 02:04 AM
பாஷா பிரதமர் கனவு எந்த முஸ்லிம் தலைவரும் காணவில்லை. உமது கனவை முதல்ல நிறுத்து. சரியா சொல்லு, உண்மைகளை வக்காளத்து வாங்க வேண்டாம் யாருக்கும்.
Reply : 0 0
akp Thursday, 22 March 2012 03:39 AM
@Manas....
கட்சி பேதம் அல்ல சகோதரரே ........ நல்ல கருத்தை யார் சென்னாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பண்பு.
Reply : 0 0
akp Thursday, 22 March 2012 03:38 AM
@Janeefar....
பாவம் ஜெனிபர் உங்களை நினைக்கையில் ...."இலவு காத்த கிளியின் கதை" யாபகம் வருது .......
Reply : 0 0
akp Thursday, 22 March 2012 03:35 AM
@Dr.Anas..
வைத்தியரே ஒங்குட அனுபவமாக்கும் ஒசிச்சாப்பாடு...(நக்குண்டார் நாவிலந்தார்)
இறைவனின் அருள் சொந்த உழைப்பு வைத்தியரே ..அதனால் தான் இந்த தாமதம்.
Reply : 0 0
MANAAS Thursday, 22 March 2012 12:19 AM
AKP நீங்கள்தான் ஒரிஜினல் கட்சிக்காரன்
Reply : 0 0
MR.JANEEFER Wednesday, 21 March 2012 11:52 PM
AKP சார் நீங்க சொல்ற மாங்காய் மரம் பட்டுபோய் ஒரு வருடம். விசயம் தெரியாதா ? நாங்க கல்லெறியல வேர் புடுங்கிறம் ?
Reply : 0 0
Dr.ANAS Wednesday, 21 March 2012 06:14 PM
AKP சார் எங்க உங்கள காணல, எங்கயும் சாப்பாடா? உங்களுக்கு என்ன Comment அடிச்சா சாப்பாடு, மனிசன் படுகிற கஷ்டம் தெரியுமா ?
Reply : 0 0
akp Wednesday, 21 March 2012 06:37 AM
@ ஜெனீபர்......
காய்ச்ச மாங்காய் மரத்துக்குத்தான் கல்லெறியும் & பொல்லெறியும்..........
Reply : 0 0
Riyas Monday, 19 March 2012 01:22 AM
நல்ல கருத்து
Reply : 0 0
favini Monday, 19 March 2012 06:19 AM
டும்...............................டும்............................டும்
Reply : 0 0
fa Monday, 19 March 2012 06:13 AM
in the present provincial council u have done this thats what Mr hon Hisbullah had been blamming on the early days of council.
Reply : 0 0
meenavan Monday, 19 March 2012 04:57 AM
உங்கள் வாரிசை உருவாக்கி விட்டீர்கள். மர்ஹூம் தலைவரை இவ்விடயத்தில் வென்று விட்டீர்கள், அரசியல் உச்சத்தில் உள்ளீர்கள். இனவாதம் குலவாதம் தேவை இல்லை. சமவாதம் பேசுகிறீர்கள். நல்ல முன்னேற்றம்.
Reply : 0 0
ishmath Monday, 19 March 2012 04:38 AM
யார் வந்தாலும் எங்களுக்கு என்ன பலன் சேர்?
Reply : 0 0
Avathaani Monday, 19 March 2012 03:44 AM
இங்கே இனவாதம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. புலிகளின் தளபதி பிள்ளையானை இன்றுவரை முஸ்லிம்கள் பெரும்பாலான முஸ்லிம்கள் எதிர்க்காமல் பெருமனதுடன் இன்றுவரை அங்கீகரித்துவிட்டு எங்களுக்கும் ஒரு சந்தர்பத்தை கேட்பதை தமிழ் சகோதரர்களால் ஏன் வெறும் பேச்சுக்காவது அங்கீகரிக்க முடியாது...
மு கா ஒன்றுசொன்னால் எதிராக சொல்வதுதான் இவருடைய வழமை.
Reply : 0 0
Faazil Monday, 19 March 2012 02:53 AM
இருபது பெயர் கூடி பத்திரிகையாளர் மீட்டிங் நடத்தினால் அது மாபெரும் மகாநாடு. உலகம் சுருண்டு போச்சு. அப்படா........
Reply : 0 0
suresh Monday, 19 March 2012 02:53 AM
நல்ல கருத்து. இருப்பினும் தமிழ் மக்களின் எந்த தலைமை பதவிக்கு வரப் போகுது..? வார தலைமை முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதா?
Reply : 0 0
ahamed Monday, 19 March 2012 01:38 AM
இது எல்லா இன அரசியல்வாதிகளின் தேர்தல் நெருங்கும் போது சொல்லும் வார்த்தைகள் ஆகும். இது நமக்கு கேட்டு பழகி போச்சு. என்ன செய்வது. இது பொது மக்களின் தலை விதி ஆகும். சரிதானே.
Reply : 0 0
AKP Monday, 19 March 2012 06:24 AM
@Mennavan....
தம்பி மீனாவா ....நீங்க குளத்தொட கோவிச்சிக்கி........ இரிக்கயள்...... Athaullah என்கிற பனங்காட்டு நரி இந்த அநாமோதய சலசலப்புகளுக்கெல்லாம் பயப்படாது .......
Reply : 0 0
KS Monday, 19 March 2012 01:19 AM
("கிழக்கு மாகாணத்தில் தற்போது மூன்று இனங்களும் ஒற்றுமையாக வாழ்கின்றன. இந்நிலையில், மாகாணத்தில் செல்வாக்குடைய மக்களின் ஆதரவை பெற்ற எவரும் முதலமைச்சராக வர முடியும். அவர் முஸ்லிமாகவோ அல்லது தமிழராகவோ அல்லது சிங்களவராகவோ இருக்க முடியும்)
ஆரோக்கியமான கருத்து. எங்கே இனவாத கருத்துகளை comment ஆக பதியும் சகோதரர்கள் ??
Reply : 0 0
ibnuaboo Monday, 19 March 2012 12:18 AM
அமைச்சர் அதாஉல்லா இதய சுத்தியாகதான் இதை கூறுகிறார். அவர் ஆரம்பமாக கத்தோலிக்கர்களுக்குரிய பாடசாலையில் கற்றதனாலும் ,தமிழ் ஆசிரிய பெருந்தகைகளிடம் இனப்பாகுபாடில்லாமல் மரியாதை செலுத்தி கற்று தேறியதால் இன்றும் அவரிடம் இனத்துவேசம் கிடையாது. தான் கற்ற தமிழ் ஆசிரியர்கள் அவரிடம் வந்தால் இன்றும் எழும்பி நின்று 'சேர் வாருங்கள்' என்று வந்தனம் கூறுவார். எங்கே உள்ளனர் இப்படியான அமைச்சர்கள்?
Reply : 0 0
அகரையூரான் Sunday, 18 March 2012 11:55 PM
தேர்தல் ஏதாவது கிட்டத்தில வரப் போகுதா? சேர் திரும்ப இருந்து தொடங்குறார்!!
Reply : 0 0
roshan Sunday, 18 March 2012 11:39 PM
Hon. minister, |Then what about the discriminations and divisions politicians brought by dividing, akkaraipattu, addalaichenai, nintavur, kalmunai pottuvil etc...etc.
Reply : 0 0
neethan Sunday, 18 March 2012 11:13 PM
விசேட மகாநாட்டின் கட்சி தலைவர், செயலாளர்,எல்லாம் நீங்கள் என்பதுடன் பிரதம அதிதி, சிறப்பு அதிதி எல்லாமே தாங்கள் தானே? மூவினங்களும் ஒற்றுமை அஸ்ரப் நகரிலுமா?
Reply : 0 0
razeek karungkoditheevu Sunday, 18 March 2012 11:12 PM
பத்திரிகையாளர்கள் சந்திப்புதானெ இதப்போய் மா நாட மயிலாட.... என்ன சார் யாருக்கு காது குத்தப்பாக்குரீங்க...
Reply : 0 0
ooraan Sunday, 18 March 2012 11:02 PM
இறைவன் நாடினால் SLMC இந்த முறை வெற்றிபெறும் ... "அல்லாஹு அக்பர்"
Reply : 0 0
jayaroopan Sunday, 18 March 2012 11:00 PM
ஐயா நீங்க பல்லாண்டு காலம் வாழ கடவுளை வணங்குகிறேன்.
Reply : 0 0
நம்முட அமச்சரு செல்லுறாக Monday, 19 March 2012 07:15 AM
ஒங்களுக்குள்ளயே ஒத்துமயா இருக்கொணா..
மூன்டு இனங்களும் எப்புடி அமச்சரே ஒத்துமயா இருக்கலாம்..?
Reply : 0 0
Mohamed Monday, 19 March 2012 02:43 PM
"தமிழ் முதலமைச்சர் என்றோ அல்லது முஸ்லிம் முதலமைச்சர் என்றோ உணர்வு ரீதியாக கோருவதன் மூலம் அரசியல் காரணமாக இன ரீதியான பிளவுகள் மீண்டும் உருவாகலாம்" என்று கூறும் நீங்கள் வடக்கு கிழக்கு பிரிய வேண்டும் என்று ஏன் அன்று குரல் கொடுத்தீர்கள்? ஏன் இந்த நாடகம்!
Reply : 0 0
meenavan Monday, 19 March 2012 02:44 PM
@ AKP..... கடலில் உள்ளவன் ஏன் குளத்தோட கோவிச்சி கொள்ளனும்? வாரிசை உருவாக்கியதும், அரசியல் உச்சம் பிழையாக இருக்கலாம் சிலவேளை ஜனாதிபதி .....ஆகும் எண்ணம்? உங்களது பயம் காட்டும் நரியை மூவினங்களிலும் பொருத்தமானவரை இனம் காட்ட சொல்லுங்கள் நிச்சயமாக முடியாது.... எங்களது தலைவர்கள் என பீற்றி கொள்ளும் அனைவருமே மகி ராசாவினால் கடிவாளம் இடப்பட்டுள்ளனர் என்பதை ஏற்றுகொள்வீர்களா? திகாமடுல்லையில் அஸ்ரப் நகர், நுரைச்சோலை விடயம் அவகளது இயலாமைக்கு சான்று.
Reply : 0 0
akkarappaththaan Monday, 19 March 2012 02:53 PM
வடக்கைப்பிரிக்க வேண்டும் என்றீர்கள் சிங்களவர்களுக்கு உங்களை நல்லவர் என பறை சாட்ட ????
தமிழ் முதலமைச்சர் வந்தாலும் பரவயில்லை என்கிறீர்கள் இந்த பருப்பு தமிழர்களிடம் வேகும்?
Reply : 0 0
pasha Monday, 19 March 2012 03:07 PM
கடந்த தேர்தலில் ஹிஸ்புல்லா அதிக வாக்கு பெற்றது மட்டும் அல்லாமல் சபையில் உள்ள அங்கத்தவர்களின் அதிக ஆதரவை பெற்றிருந்தும் கூட பிள்ளையான் ஜனாதிபதியால் முதலமைச்சராக்கப்பட்டார் என்பது உலகறிந்த உண்மை. இப்படி இருக்கும் நிலையில் அமைச்சர் அதாவுல்லா மக்களால் தெரிவு செய்யபட்ட முதலமைச்சர் தமிழர் என்றால் பிரச்சினை இல்லை என்று கூறி முழு பூசணியை சோற்றில் மறைக்க பார்க்கிறார். மக்கள் யாரை தெரிந்தாலும் முதலமைச்சரை தெரிவது ஆளும் கட்சியின் தலைமை என்று இருக்கும் நிலையில் இந்த கதைய கேட்டு ஆதரவு கருத்து சொல்லும் இவர்கள்...
Reply : 0 0
riswan Monday, 19 March 2012 04:23 PM
ஆட்சி அதிகாரமெல்லாம் அல்லாவுக்கே
Reply : 0 0
DR,ANAS Monday, 19 March 2012 07:11 PM
அது இருக்கட்டும். ஜெனிவாவுக்கு Minister. .Raufhakeem (LLB), Minister. Rishad bathudeen (NDT) & min.Hisbullah (LLB), எல்லோரும் போயிருகாங்க. நீங்க போகல்லியா?
Reply : 0 0
kiyas Monday, 19 March 2012 07:55 PM
முஸ்லிம் வந்தால் ஏற்றுகொள்ள முடியாதா ?
Reply : 0 0
m.i.m.infas Monday, 19 March 2012 08:12 PM
நல்லாவே குதிரை ஓட்டுறார்.
Reply : 0 0
pasha Monday, 19 March 2012 08:37 PM
சிங்களவரிடம் நல்ல பெயர் எடுத்து, தமிழரிடமும் நல்ல பெயர் எடுத்து, பிரதமர் கனவு கண்டு மறைந்தார் ஒரு தலைவர். அந்த வழியில் வந்த இவரும் கனவு காண்கின்றார்.
Reply : 0 0
najath Monday, 19 March 2012 09:07 PM
தலைவர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் .
Reply : 0 0
mr.janeefer Tuesday, 20 March 2012 12:27 AM
தமிழர்களுக்கு முதலமைச்சு பதவி வழங்கப்பட்டால் மேயர் சக்கி அவர்களை மாகாண சபை தேர்தலுக்கு களம் இறக்குவதில்லையா ?....
Reply : 0 0
rozan Tuesday, 20 March 2012 12:31 AM
ஆனா கல்முனை இலிருந்து "முதலமைச்சர்" வந்துவிட விட்டு விடுவீங்களா?
Reply : 0 0
mohamed Tuesday, 20 March 2012 01:46 AM
இவர்களது கூட்டம் எல்லாம் அக்கரைபத்தில் மட்டும் தான். குதிரை எப்பவும் வெளிய வராது வந்தாலும் ஓடாது.
Reply : 0 0
சிறாஜ் Tuesday, 20 March 2012 02:02 AM
கடந்த முதலமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வராமல் விட்டதற்கு காரணம் எல்லாருக்கும் நன்றாகவே தெரியும். இம்முறை முஸ்லீம் காங்கிரஸ் முதலமைச்சை கைப்பற்றி விடுமோ என்னும் பயம்தான், யாரு வந்தாலும் அது தமிழராக இருந்தாலும் ஏற்றுக்கொள்வேன் என்று சொல்வது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
4 hours ago
4 hours ago