Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2012 மார்ச் 20 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் ஹிதாயாபுர பிரதேசத்தில் உள்ளூர் துப்பாக்கி தயாரிப்பு நிலையம் ஒன்றை நடத்தி வந்ததாகத் தெரிவிக்கப்படும் இருவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.
அறுகம்பை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அத்துப்பாக்கி தயாரிப்பு நிலையத்தை விசேட அதிரடிப்படையினர் சனிக்கிழமை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர். இதன்போது துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டதுடன், துப்பாக்கி உதிரிப்பாகங்களும் கைப்பற்றப்பட்டன.
கைதுசெய்யப்பட்ட இருவரும் பொத்துவில் பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினரால் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே இவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஜ.என்.றிஸ்வான் உத்தரவிட்டார்.
pasha Tuesday, 20 March 2012 08:46 PM
இவர்களை பாவித்து ஒரு தொழிற்சாலை நிறுவி நமக்கு தேவையான துப்பாக்கிகளை நாமே உற்பத்தி செய்து கொள்ளலாம் மிகயானால் ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணியை பெறலாம்.
Reply : 0 0
ashraff Wednesday, 21 March 2012 01:40 PM
மிஸ்டர் பாஷா! துப்பாக்கி கலாசாரம் பண்படாத மக்கள் மத்தியில் அழிவை உண்டாக்கும். அழிந்தது போதாதா??
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
4 hours ago
4 hours ago