2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மூக்குக் கண்ணாடி வழங்குவதற்கான கண்பரிசோதனை நிகழ்வு

Kogilavani   / 2012 மார்ச் 21 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

கண்பார்வை குறைந்தவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நிந்தவூர் பிரதேசத்தில் கண் பார்வை குறைந்தவர்களுக்கு மூக்குக் கண்ணாடி வழங்குவதற்கான கண்பரிசோதனை நேற்று செவ்வாயக்கிழமை நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.

நிந்தவூர் சிரேஷ்ட பிரஜைகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் கல்முனை நகர லயன்ஸ் கழகத்தினால்  இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் கண்வைத்திய நிபுணர் டாக்டர் எம்.ஏ.எஸ்.அமீலா, கல்முனை நகர லயன்ஸ் கழக தலைவர் லயன் கே.பொன்னம்பலம், வலயத் தலைவர் எஸ்.தைரியராஜா, பணிப்பாளர் சபை உறுப்பினர் சக்கூர், நிந்தவூர் சிரேஷ்ட பிரஜைகள் சம்மேளனத்தின் தலைவர் எம்.மீரான், செயலாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.கபூர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.      

                           


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .