2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சம்மாந்துறை சமூக பொலிஸ் சேவை பிரிவினை புதிய கட்டிடத்துக்கு இடமாற்றல்

Super User   / 2012 மார்ச் 25 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


சம்மாந்துறை சமூக பொலிஸ் சேவை பிரிவினை புதிய கட்டிடத்துக்கு இடமாற்றல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

குறித்த பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.எம்.அமீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் ஆசியா மன்றத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எஸ்.இப்திகார் றிசாத் மற்றும் கெப்சோ திட்ட பணிப்பாளர் ஏ.ஜே.காமில் இம்டாட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

இதன்போது, சமூக பொலிஸ் சேவை பிரிவின் பெயர் பலகையும் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. பொலிஸ் திணைக்களத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்தி சிறந்த சேவையினை வழங்குவதற்காகவே சமூக பொலிஸ் சேவை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .