2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அட்டாளைச்சேனையில் பயன் தரும் மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவதாக மக்கள் விசனம்

Menaka Mookandi   / 2012 மார்ச் 26 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


அட்டாளைச்சேனை, கோணாவத்தை ஆற்றினை அண்டிய தமது குடியிருப்பு நிலங்களில் இருந்த நூற்றுக் கணக்கான பயன்தரும் தென்னை மரங்கள், தம்மிடம் அனுமதி பெறப்படாமல் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளதாக காணி உரிமையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

'கமநெகும' திட்டத்தின் கீழ் இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் 'ஒரு கிராமத்துக்கு ஒரு வேலை' செயற்றிட்டத்தை முன்வைத்தே – தமது தென்னை மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.

கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை - 'ஒரு கிராமத்துக்கு ஒரு வேலை'த் திட்டத்தின் மூலம் கோணாவத்தை ஆற்றின் கரைகளில் அணைக்கட்டுகளை அமைக்கும் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டு வருகின்றார். 

இந்த வேலைத் திட்டத்தினைக் காரணமாக வைத்தே, தமது பயன்தரும் தென்னை மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, தங்கள் வளவிலிருந்த பயன்தரும் தென்னை மரங்கள் எவ்வித முன் அனுமதியும் பெறப்படாமல் வெட்டி வீழ்த்தப்பட்டமை தொடர்பில், பாதிக்கப்பட்ட நபரொருவர் அக்கரைப்பற்றுப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0

  • சிறாஜ் Monday, 26 March 2012 11:58 PM

    சட்ட விரோதமாக ஆற்றை மூடி மக்கள் தென்னை மரம் வைத்திருப்பது தவறு என்று எவர் சொன்னார்? அங்கு சட்ட விரோத மரம் வெட்டப்படவில்லை அப்படி வெட்டனும் என்றால் பாலத்தடியில் புதிதாக போட்ட மண்ணையும் புதிதாக நட்டிய 9 அடி தென்னை மரத்தையும் ஆற்றுக்கு பக்கத்தில் கட்டிய வீட்டையும் முதலில் அப்புறப்படுத்தனும். இது தப்பில்லையா?

    Reply : 0       0

    சிறாஜ் Wednesday, 28 March 2012 04:58 AM

    இதுக்கு விசாரைக்குழு அமைக்கப்படும் தலைவராக குதிரப்படைத்தலைவரையும் செயலாளராக குதிரையின் கடிவாளம் க.உ வையும் போட்டால் நல்லம்.

    Reply : 0       0

    unkauuraan Wednesday, 28 March 2012 01:12 AM

    இதுக்கொரு விசாரணைக் குழு அமைத்தால் சரி....! (அரசியல்வாதிகள் இதைத்தான் அடுத்ததாக செய்வார்கள்) விசாரணை குழு அறிக்கை வரும் வேளையில் மக்களின் கோபம் குறைந்திருக்கும். இது தான் Politics.....!

    Reply : 0       0

    unpyouthamparadistrict Tuesday, 27 March 2012 10:04 PM

    அழகு படுத்தல் வேறு.. அநியாயம் வேறு... ஒரு வீதி இருக்கும் நிலையில் இன்னோறொரு வீதி எதற்கு ? அணைக்கட்டு போதும் . மரங்களை காப்பாற்றி இருக்கலாம்.. மரங்கள் எழிலை அதிகரிப்பவை. தற்போது கோணவத்தை தன அழகினை இழந்து நிற்கிறது..

    Reply : 0       0

    faroos Tuesday, 27 March 2012 08:44 PM

    தென்னை மரம் வெட்டுவது பிரச்சினை இல்லை. அதனால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்காக மாற்று வழிகளையும் முன்வைத்து வெட்டுவீர்களானால் எவரையும் பாதிக்காது. அது அமைச்சரின் வீட்டை அலங்கரிக்க வெட்டி இருந்தாலும் சரி.
    அமைச்சரின் தேவை ஊருக்கு சேவை அல்ல மாறாக அமைச்சரின் சேவை ஊருக்கு தேவை. இதுதான் தேவை தலைவா !.

    Reply : 0       0

    min from qatar Tuesday, 27 March 2012 04:25 PM

    ஜநூவர் அபிவிருத்தி என்றால் என்ன ? மரத்தை வெட்டுதலா ? அவர்ற வீட்டுக்கு முன்னால முடின மண்ணையும் நாட்டின மரத்தையும் யார் வெட்டுவார்? அதை எனக்கு தெளிவுபாடுத்துங்க! நன்றி janoovr .

    Reply : 0       0

    senaiyuraan Tuesday, 27 March 2012 03:24 PM

    சிராஜ்
    அங்கே சட்ட விரோதமாக ஆற்றை மூடி கடை கட்டி இருக்கும் உங்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் பத்தி சொல்லுங்க!
    பாலத்தடியில் ஒன்றும் புதிதாக மண் போடப் படவில்லை பொது நிறுவனத்திக்கு 1996 ம் ஆண்டு அரசினால் விளையாடு கழகத்திற்கு வழங்கப் பட்ட காணிதான் அது. அதை யாரும் சொந்தம் கொண்டாட தேவை இல்லை.

    Reply : 0       0

    faris Tuesday, 27 March 2012 07:11 AM

    நல்லதே செயுங்கள்.

    Reply : 0       0

    risni Tuesday, 27 March 2012 04:57 AM

    அபிவிருத்திகள் varavekaththakkavai. நல்லது செய்யட்டும் அவரை விடுங்கள். ஆனால் மரத்தை வெட்டாமல் road அமைக்க முயற்சித்திருக்கலாம்.

    Reply : 0       0

    janoovar Tuesday, 27 March 2012 03:25 AM

    சிறாஜ், எப்போதும் இப்படியான நல்ல அபிவிருத்திகளுக்கு முட்டாள்தனமான கருத்துக்களைதான் முன் வைப்பது அரசாங்க காணியை மூடிக்கொள்ளும் போது உங்களுக்கு ஒன்றும் இல்லை. அமைச்சர் அவர்களே உங்கள் அபிவிருத்தி பயனத்தை தொடருங்கள்...............

    Reply : 0       0

    samoohan Tuesday, 27 March 2012 02:54 AM

    சரியாக சொன்னீர்கள் சிராஜ்

    Reply : 0       0

    சிறாஜ் Monday, 26 March 2012 07:03 PM

    ஊராண்ட கோழி அறுத்து தன் தகப்பன் பெயரில் கத்தம் ஓதுதல் என்பது இதுதான். பொருளாதார அமைச்சு ஒதுக்கிய நிதி மக்களுக்கு சேவை செய்யனும் என்று சொல்லி இது. தனது வீட்டுக்கு முன்னால் அலங்கரிக்க வேண்டும் என்பதற்க்காக அநியாயமாக மக்களுக்கு பாரிய பலன் தரும் இரு நூற்றுக்கு மேற்பட்ட தென்னை மரங்களை இரவோடு இரவாக வெட்டி சாய்ய்த்திருப்பது யாரால்தான் பொறுக்க முடியும்?

    Reply : 0       0

    sharmee Monday, 26 March 2012 11:07 PM

    ஆறும் அதனை அண்டிய பிரதேசங்களும் அரசாங்கத்துக்கு சொந்தமானது. சட்ட விரோதமாக ஆறு மூடப்பட்டு வைத்த தென்னை மரங்களை வெட்டுவதற்கு யாருடைய அனுமதியையும் பெறத் தேவை இல்லை. நல்லவை தொடர்ந்து நடக்கும்.

    Reply : 0       0

    riswan Monday, 26 March 2012 10:14 PM

    தென்னை மரத்தை வெட்டினது மற்ற தென்ன மரத்துக்கு தெரியுமா?.. அரசு தென்னை மரங்களுக்கு உரிய நியாயத்தை வழங்க வேண்டும்... மக்களுக்கு அல்ல.

    Reply : 0       0

    செம்பகம் Monday, 26 March 2012 08:18 PM

    ஏன் இந்த கொலைவெறி?

    Reply : 0       0

    சிறாஜ் Monday, 26 March 2012 07:14 PM

    எல்லாத்துக்கும் பதில் சொல்லனும் பார்த்திட்டு இருங்கள்.

    Reply : 0       0

    ஹம்சா சனூஸ் Monday, 26 March 2012 07:13 PM

    தென்னை மரங்களை வெட்டியது நல்லது செய்யத்தான். மக்களுக்கும் ஓருக்கும் நல்ல விடயங்களை செய்து கொண்டிருக்கும் ஒரே ஒருவர் எங்கள் அமைச்சர் உதுமாலெப்பை அவர்கள்தான். எனவே அமைதியுடன் பார்த்துக்கொண்டிருங்கள் மக்களுக்கு நடக்கும் சேவைகளை.

    Reply : 0       0

    குளத்தூரான் Monday, 26 March 2012 07:11 PM

    யாராக இருந்தாலும் மக்களின் சொத்துக்களின் அனுமதி இல்லாமல் கைவைப்பதற்கு யார் அனுமதி கொடுத்தது? ஊர் தவிசாளர் டீஎஸ் மார் எங்கே?

    Reply : 0       0

    அன்சார் Monday, 26 March 2012 07:10 PM

    பொருளாதார அமைச்சு நிதி ஒதுக்கிய அப்பாவி மக்களின் காணிகளில் இருக்கும் மரங்களை வெட்டவா இதனை உடனே மேர்வின் சில்வாக்கு சொல்லனும்.

    Reply : 0       0

    அனீஸ் Monday, 26 March 2012 07:09 PM

    ஊருக்கு சேவை செய்கிறோம் என்று சொல்லி ஏழை மக்களின் வருமானமாக இருந்த நல்ல முறையில் காய்க்கும் தென்னை மரங்களை வெட்டி இருப்பது அநியாயம் அட்டூழியம்.

    Reply : 0       0

    senaiooran Monday, 26 March 2012 07:06 PM

    தென்னை மரம் என்னப்பா செய்தது? ஏன் அதனை வெட்டி மக்களின் சாபத்தைப்பெற்றீர்கள்? நடந்திருப்பது அநீயாயம். உடனே தீர்வு மக்களுக்கு கிடைக்க வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .