2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சாய்ந்தமருது - மாளிகைக்காடு உலமா சபையினரால் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பாராட்டு

Super User   / 2012 மார்ச் 27 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு ஆகிய பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்ளை கௌரவிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது - மாளிகைக்காடு உலமா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சாய்ந்தமருது - மாளிகைக்கா உலமா சபையின் தலைவர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் என்.எம்.ஏ.முஜீப் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்ஹரீஸ், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப், சாய்ந்தமருது பிரதேசத்திலிருந்து கல்முனை மாநகர சபைக்கு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட ஏ.ஏம்.பசீர், ஏ.எம்.பிர்தௌஸ், ஏ.நசார்டீன் மற்றும் காரைதீவு பிரதேச சபைக்கு உறுப்பினராக மாளிகைகாடு பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஏ.பாயிஸ் ஆகியோர் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.





You May Also Like

  Comments - 0

  • zeefa Thursday, 29 March 2012 07:29 PM

    உலமா சபை தலைவர் அவர்களே இதற்கு முதல் தெரிவான மாகாண சபை உறுப்பினர்கள் உங்களின் உலமா சபைக்கு தெரியவில்லையக்கும். செய்யுங்கோ சந்தோசம். அனால் உலமா சபை ஊருக்கு பொதுவானது எல்லோரையும், பாராட்டுங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .