2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கல்முனையை சேர்ந்த சர்வதேச ஆய்வாளரான பேராசிரியர் அப்துல் கபூர் நெதர்லாந்தில் காலமானார்

Super User   / 2012 மார்ச் 28 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)

சர்வதேச ஆய்வாளரான பேராசிரியர் ஏ.எல்.எம்.அப்துல் கபூர் இலங்கை நேரப்படி நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நெதர்லாந்தில் காலமானார்.

கல்முனையை சேர்ந்த இவர், கொழும்பு மார்கா ஆய்வு நிறுவனத்தின் முன்னால் சிரேஸ்ட அதிகாரியும் நெதர்லாந்து துறைசார் தொழில்நுட்ப மன்றத்தின் தலைவரும், நெதர்லாந்து பல்கலைக்கழகமொன்றின் விரிவுரையாளருமாக கடமையாற்றியுள்ளார்.

நெதர்லாந்து - கல்முனை நட்புறவு அமைப்பின் தலைவராகவும் கல்முனை கல்வி மற்றும் கலாசார மேம்பாட்டு ஸ்தாபனத்தின் சிரேஸ்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபரவியல் துறையில் பட்டம் பெற்றது முதல் விரிவுரையாளராக தனது பணியை ஆரம்பித்த இவர் இத்துறையில் பல நூல்களையும் எழுதியுள்ளார்.

இவரின் ஜனாஸா நல்லடக்கம் இலங்கை நேரப்படி நாளை வியாழக்கிழமை காலை நெதர்லாந்தில் இடம்பெறவுள்ளது.

You May Also Like

  Comments - 0

  • pasha Wednesday, 28 March 2012 09:06 PM

    இன்னலிலாஹி வஇன்னா இலஹி ராஜியூன் நெதர்லாந்தில் இருந்த போதும் பிறந்த தன மண்ணை மறக்காமல் சேவை புரிந்தவர் அண்மையில் இவர். முன் நின்று கட்டிய நூலகம் இதற்கு ஒரு சான்று.

    Reply : 0       0

    ashraff Wednesday, 28 March 2012 09:12 PM

    இன்னா லில்லாஹி வா இன்னா இலைய்ஹி ராஜிஊன் . அல்லாஹ் உங்களை பொருந்திக்கொள்வானாக. (அஷ்ரப் ஹாபிஸ் )

    Reply : 0       0

    Reesath shareef Wednesday, 28 March 2012 09:17 PM

    கல்முனையின் கல்விமானே
    கரையூரின் கதிரவனே
    கல்வியின் ஊற்றே
    புன்னகை மதியே ....

    12 வருட ECDO வின் சிந்தனை
    முதிர்ச்சியாளனே உங்கள் இருக்கை
    இனி எப்போதுமே வெற்றிடமா?
    நினைக்கையில் மனது வரண்டுபோகிறது
    இதயம் ஓய்வு கேட்கிறது
    உங்களுக்கு சுவனம் வேண்டி பிரார்த்தனை
    செய்வோரில் நானும் ஒருவன்..

    இப்படிக்கு
    உங்கள் தம்பி
    பர்சாத்.

    Reply : 0       0

    Salman Wednesday, 28 March 2012 09:32 PM

    இன்றைய இரவு ஒரு மீளாத்துயர்,
    மனதின் செரிமானம் கூடி
    உங்களின் நினைவுகள் கணன்று
    எரிகிறது கபூர்

    உங்களின் ஆன்மா
    இறைவனின் விதி நாடி செல்கிறது
    இறைவன் உங்களுக்கு முடிவே இல்லாத
    சொர்க்கத்தினை அருள்வானாக!!

    Reply : 0       0

    mbm Wednesday, 28 March 2012 09:51 PM

    கல்வியில் உயர்ந்தோர் கர்வம் கொண்டிருக்க
    கண்டிருக்கேன் நானும்
    கலங்கம் எதுவுமில்லை - இவர் மேலே
    சின்னப்பிள்ளைகள் நம்மை கூட...
    கருணை கொண்டு கட்டித்தழுவி
    தோழன் போல் அரவணைத்தார் - அன்பு பெருக!

    இன்னாலில்லாஹி வ இன்னா இலிஹி ராஜுஊன்!

    Reply : 0       0

    mmjesmin Thursday, 29 March 2012 02:14 AM

    கல்முனை பிரதேச கல்வி மற்றும் சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்த கல்விமானின் இழப்பு கல்முனை பிரதேத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரழப்பாகும்.
    இதற்கு றீஸாத் சரீப் எழுதியுள்ள கவிதை மிகப்பொருத்தமாவுள்ளது..
    எம்.எம்.ஜெஸ்மின் - ஊடகவியலாளர்

    Reply : 0       0

    MMA.Jabbar Thursday, 29 March 2012 04:37 PM

    இன்னாலில்லாஹி வ இன்னா இலிஹி ராஜுஊன் கல்முனை பிரதேசம் ஒரு அறிவாளியை ilanthullathu

    Reply : 0       0

    Faisel Thastheek Friday, 30 March 2012 11:16 PM

    இன்னாலில்லாஹி வ இன்னா இலஹி ரஜிஹுன்

    Reply : 0       0

    Eng M M Umarlebbe Monday, 02 April 2012 05:39 PM

    இன்னாலில்லாஹி வ இன்னா இலிஹி ராஜுஊன்

    இறைவன் அவருக்கு சொர்க்கத்தினை அருள்வானாக!!

    -பொறியலாளர் எம் எம் உமர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .