2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கஞ்சா கொண்டுசென்ற மூவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 29 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

முச்சக்கரவண்டியில் ஒரு கிலோ கஞ்சாவை கொண்டுசென்ற குற்றச்சாட்டில்  கைதுசெய்யப்பட்ட மூவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் நேற்று  உத்தரவிட்டார்

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை பொத்துவில் சியம்பலாண்டுவ பிரதான
வீதி 9ஆம் கட்டைப் பிரதேசத்தில் குறித்த முச்சக்கரவண்டியை சோதனை செய்தபோது
ஒரு கிலோ 15 கிராம் கஞ்சா மீட்கப்பட்டதுடன், முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, இவர்களை எதிர்வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  பொத்துவில் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் உத்தரவிட்டார்

கைதுசெய்யப்பட்வர்கள் சியம்பலாண்டுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .