2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கல்முனை மாநகரசபை அமர்வுகளை த.தே.கூ உறுப்பினர்கள் பகிஷ்கரிப்பு

Menaka Mookandi   / 2012 மார்ச் 29 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

கல்முனை மாநகர சபை மேயர், அபிவிருத்திகளின் போது தமிழ் பிரதேசங்களை புறக்கணிப்பதாக மூன்று குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தமிழ்தேசிய கூட்டமைப்பு மாநகர சபை உறுப்பினர்கள் மாநகர சபை அமர்வுகளில் பங்குகேற்காமல் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருவதுடன் இந்த மூன்று கோரிக்கைகளை மேயர் நிறைவேற்றும் வரை சபை அமர்வுகளில் பங்குபற்றாமல் பகிஷ்கரிப்பில் ஈடுபடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகரசபை எதிர்கட்சி தலைவர் ஏ.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.

இந்த மாநகர சபையின் மாதந்த சபையமர்வுகள் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு சபை உறுப்பினர்கள் மாநகர சபை அமர்வுகளில் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகரசபை எதிர்கட்சி தலைவர் அமிர்தலிங்கம் தெரிவிக்கையில்,

'மாநகர சபையினால் செய்யப்படும் அபிவிருத்திகளில் தமிழ் பிரதேசங்கள் புறக்கணிப்பு, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வெளியில் இருந்து வரும் அபிவிருத்தியில் எங்களிடம்  ஆலோசனை கேட்கப்பட வேண்டும், கல்முனை பிரதேசத்தில் 3ஃ1 பகுதியினர் அதாவது 33 வீதம் தமிழ் மக்கள் உள்ளனர். எனவே இந்த விகிதாசாரத்தின் ஊடாக வேலை வாய்ப்பு மற்றும் அபிவிருத்திகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சபை உறுப்பினர்கள் ஊடாக செய்யப்பட வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகள் முன்வைத்து சபை அமர்வுகளை பகிஷ்கரித்து வருகின்றோம்.

இந்த பிரச்சினையானது, கல்முனை மாநகர மேயருக்கும் எமது தமிழ் தேசிய கூட்டமைப்பு சபை உறுப்பினர்களுக்குமான பிரச்சினையே தவிர தமி;ழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஸ்ரீறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையிலான பிரச்சனை அல்ல.

கடந்த 2007ஆம் ஆண்டு பஸ்தரிப்பு நிலையத்தில் அமைக்கப்பட்ட கடைத் தொகுதியில் 6 கடைகள் விகிதாசாரத்தின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் எனவும் இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர், மாவை சேனாதிராஜாவிடம் தெரிவித்துள்ளதாகவும் எதிர்வரும் 3ஆம் திகதி கல்முனை பிரதேசத்திற்கு வருவதாகவும் முஸ்லிம் காங்கிரசின் தலைமையுடன் பேச்சு நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • செம்பகம் Thursday, 29 March 2012 06:33 PM

    ஒரு நாளும் இல்லாத பிரச்சினை இப்ப இந்த புதிய இளைய முதல்வர் எதிர் நோக்குகிறார். இதனை ஏன் இன்னும் கட்சித் தலைவர்கள் தீா்த்து வைக்காமல் இருக்கின்றார்கள் ?

    Reply : 0       0

    mayilwahanam Thursday, 29 March 2012 07:51 PM

    பின்னால் இருந்து பேசாமல் சபைக்கு சென்று உங்கள் கருத்துக்களை பேசுவதால்தானே அதில் அர்த்தம் இருக்கும்?

    Reply : 0       0

    pasha Thursday, 29 March 2012 09:55 PM

    செம்பகம், இந்த தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு மேயரின் கட்சி தலைமையின் அரவணைப்பு இருக்கும் வரை இது தொடரத்தான் செய்யும்

    Reply : 0       0

    nalanvirumbi Thursday, 29 March 2012 10:02 PM

    கூட்டணியினர் வழமையான தங்களது வங்குரோத்து அரசியலைத் தொடங்கி விட்டனர். பாவம் அப்பாவி மேயர், மேயரை எந்த அபிவிருத்தியையும் செய்ய விடமாட்டினம். வைக்கோல் பட்டரை -------------போல!

    Reply : 0       0

    M.A.A.Rasheed Thursday, 29 March 2012 11:45 PM

    நியாயமாக நடந்து சேவை செய்ய வேண்டும்.

    Reply : 0       0

    m.i.samsudeen Friday, 30 March 2012 03:29 AM

    விகிதாசாரம் இலாபத்தில் மட்டும்தானா? கடை தொகுதி திறந்த கேள்வி அடிப்படையில் வழங்கப்படுவது சட்டம் இதனை யாராலும் மாற்ற முடியாது. இனவாதம் வேண்டாம்.

    Reply : 0       0

    m.i.samsudeen Friday, 30 March 2012 04:11 AM

    திறந்த கேள்வியை விடவும் நியாயம் உள்ளதா ?

    Reply : 0       0

    சிறாஜ் Friday, 30 March 2012 04:34 AM

    இவங்க எங்கதான் நல்லா இருந்த சரித்திரம் இருக்கு?

    Reply : 0       0

    rrrr123 Friday, 30 March 2012 04:31 PM

    கடைத்தொகுதியானது இரு சமூகங்களின் பயன்பாட்டுக்காகவே கட்டிக்கொடுக்கப்பட்டது. சமூக நல்லிணக்கமே அதன் நோக்கமாகும். இதை யாவரும் அறிவார்கள். பின்னர் திறந்த கேள்வி என்று பண முதலைகளுக்கு வழங்கி (ஒருவருக்கு ஆறு கடைகள்) வைப்பதால் சமூக நல்லிணக்கம் சமூக ஒற்றறுமை போணப்படுமா? மனட்சாட்சி உள்ள ஒவ்வொருவரரும் ஏற்றுக்கொள்வீரா? திட்டம் முழுமைபெறுமா? நிறுவனத்தின் நோக்கம் இங்கு நிறைவேறவில்லை. அரசியல் நோக்கும் வரட்டுக் கௌரவமுமே முன்னிலை பெறுகின்றது.....

    Reply : 0       0

    nalanvirumbi Friday, 30 March 2012 10:42 PM

    திருவாளர் rrrr123 அவர்களே! திறந்த கேள்வி விண்ணப்பங்களை திறக்கின்ற போது நீங்கள் சமூகமளித்தீர்களா. ஆறு கடைகளையும் பணமுதலைகளுக்கு வழங்கவில்லை ஐயா. வேறு எந்த முதலையும் வாயே திறக்கல்ல ஐயா. இப்பதான் முதலை எல்லாம் கண்ணைத் திறந்து வாயைப் பிளந்து கொண்டு நடனம் ஆடுதுகள் ஐயா. அப்பாவிகள் பெரும் கஷ்டத்திற்கு மத்தியில் கடன் பட்டு, தாலியைகூட நஷ்டத்திற்கு வித்துப்போட்டு தவித்துப் போய் நிற்குதுகள் ஐயா. வயித்துல மண்ணைப் போட்டு சாபத்தை விலைக்கு வாங்காதைங்கோ ஐயாமாரே!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .