2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கல்முனையை கூறு போட ஒருபோதும் அனுமதியோம்: மாநகர உறுப்பினர் அமீர்

Menaka Mookandi   / 2012 மார்ச் 30 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஆர்.அஹமட்)

'கல்முனையில் உள்ள தமிழர்களுக்கு ஒரு தமிழ் மேயரும், முஸ்லிமகளுக்கு ஒரு முஸ்லிம் மேயரும் என இன ரீதியாகச் சிந்தித்து கல்முனையை கூறு போடுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்' கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் தெரிவித்தார்.

முதல்வர் சிராஸ் மீராசாகிவு தலைமையில் நடைபெற்ற மாதாந்த அமர்வின் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

'கல்முனைக்கான மேயரை இன ரீதியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. கல்முனை மாநகர சபைக்கு ஒரு தமிழ்ச் சகோதரர் மேயராகத் தெரிவு செய்யப்பட்டால், அந்த மேயரின் கீழ் மிகவும் சந்தோசமாக உறுப்பினராகச் இருப்பதற்கு எந்த தயக்கமும் காட்டப்போவதில்லை.

கல்முனை மாநகர மேயர் தமிழ் பிரதேசங்களை புறக்கணித்துச் செயற்படுவதாக உறுப்பினர் அமீர்தலிங்கம் குற்றம் சாட்டிக்கொண்டு வருகின்றார். அது உண்மைக்கு புறம்பான கூற்றாகும். மேயர் இன ரீதியாகச் செயற்படவில்லை.

இந்த புதிய சபையானது தனது  கன்னி அபிவருத்தியை துரைவந்தியன் மேடு எனும் தமிழ் கிராமத்திலேயே மேற்கொண்டுள்ளது. அக்கிராமத்திற்கு ரூபா 80 இலட்சத்திற்கும் அதிகமான நிதியில் பாதை அமைக்கப்படவுள்ளது.

தமிழ் கிராமங்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறும் இவர், கல்முனை மாநகரசபை முஸ்லிம் பிரதேசங்களுக்கு செய்த அபிவிருத்திகள் என்னவென்று கேட்கின்றேன். மேயர் இன ரீதியாகச் செயற்படவில்லை. பொது மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்துச் செயற்படுகின்றார்.

மக்களிடையே இன ரீதியான கருத்துக்களைப் பரப்பி, குழப்பங்களை ஏற்படுத்த எத்தனிக்கின்றவர்களை ஒரு போதும் தமிழ் முஸ்லிம் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • Aruthran Friday, 30 March 2012 09:04 PM

    பஸ் தரிபிட கடைகள் ???

    Reply : 0       0

    Tamil Muslim Well-wisher Saturday, 31 March 2012 03:46 AM

    திரு அமிர்தலிங்கம் அவர்கள் சிறு சிறு விடயங்களுக்காகவெல்லாம் இன ரீதியாக சிந்தித்து அபாண்டமான பாரிய குற்றச்சாட்டுக்களை சுமத்திவருவது தவிர்க்கப்படல் வேண்டும்.

    Reply : 0       0

    MUHAMMAD Saturday, 31 March 2012 05:09 PM

    பயங்கரவாதத்தை மறைமுகமாக உலகமெல்லாம் வளர்த்து ஆயுதத்தை விற்பனை செய்து வயிறு வளர்க்கும் அமெரிக்க நயவஞ்சகர்கள் போல நாமும் இருக்கக் கூடாது. நல்ல எண்ணங்களை எல்லா சமூகத்தவர்களும் ஒற்றுமையுடன் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டும்.

    Reply : 0       0

    riswan Saturday, 31 March 2012 06:55 PM

    கீழ்த்தரமான அரசியல்வாதிகளை விரட்டியடிக்க வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .