2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சின்னப்பாலமுனை கடற்கரை உப வீதி திறப்பு

Menaka Mookandi   / 2012 மார்ச் 30 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


அட்டாளைச்சேனை பிரதேச சபை நிதியின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட சின்னப்பாலமுனை கடற்கரை உப வீதியினை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.எம்.நசீர் நேற்று சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.

இந்த வைபவத்தில், உப தவிசாளர் எம்.ஏ.அன்சில், பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஏ.எல்.அமானுல்லா மற்றும் என்.எல்.யாசிர் ஐமன் உள்ளிட்ட பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

சின்னப் பாலமுனை மீனவர்களின் நீண்டநாள் தேவையாக இருந்து வந்த மேற்படி வீதி நிர்மாணத்துக்கென அட்டாளைச்சேனைப் பிரதேச சபை சுமார் 3 இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்திருந்தது.

அட்டாளைச்சேனை பிரதேச சஇபின் மூலம் மேற்படி வீதியினை அமைத்துக் கொடுக்க வேண்டுமென கடந்த ஒக்டோபர் மாதம் - சஇபின் மாதந்த அமர்வில் உப தவிசாளர் முன்வைத்திருந்த பிரேரணையொன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதற்கமையவே - இவ்வீதி நிர்மாணிக்கப்பட்டு, தற்போது பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி வீதியின்மையால், இப் பகுதி மீனவர்கள் தாம் பிடிக்கும் மீன்களை மொத்த வியாபாரிகளுக்குக் கொடுப்பதற்காக அருகிலுள்ள கடற்கரை வீதிக்குக் கொண்டுவரும் பொருட்டு கூடையொன்று 750 ரூபாவினை செலவிட வேண்டியிருந்தது.

ஆனால், தற்போது இந்த உபவீதி அமைக்கப்பட்டதன் பின்பு - மீன்களைப் பிடிக்கும் இடத்திலிருந்து வாகனங்களில் மீன்களை உரிய இடத்துக்கு எடுத்துச் செல்ல முடிவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

You May Also Like

  Comments - 0

  • சிறாஜ் Friday, 30 March 2012 07:20 PM

    ஒற்றுமையுடன் பயணிக்கும் பிரதேசசபையின் பணியைப் பாராட்டுகிறேன்

    Reply : 0       0

    palamunaiyaan Sunday, 01 April 2012 10:29 AM

    பாஸ் எங்கே ரோடு போட்டே ஏன்னு சொல்றீன்கே ரோடு எங்க காணும்

    Reply : 0       0

    சிறாஜ் Monday, 02 April 2012 04:24 AM

    பாலமுனையான், பக்கத்தில் உள்ள தென்னை மரத்தின் மேலே பார்த்தால் குரும்பதான் தெரியும். கீழே பாருப்பா ஆனால் குரும்பை குடிக்கும் புத்தி போகாது என்ன?

    Reply : 0       0

    jaya Wednesday, 04 April 2012 06:53 PM

    meenavarkalu ev veethi nalla payanulathaha ulathu. Palamunaiyaan entra pearla oruvar madathanama karuthu solla, avaruku pathil alika poi brother siraj siru pilaithanema karuthu soli erikangala.. Siraj ithuthaan naaharikamaa? Ungalla nalla mathipu vaithiruthan.

    Reply : 0       0

    சிறாஜ் Friday, 06 April 2012 03:52 AM

    அவர் பெயரை பாலமுனையான் என்று சொன்னதால்தான் நான் அப்படி சொன்னேனப்பா. தப்பு என்றால் மன்னிக்கவும். சரியா நானும் உங்கட ஊர்தான்.

    Reply : 0       0

    jaya Sunday, 08 April 2012 06:23 PM

    thanks siraj. Vaalthukal.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .