2025 ஜூன் 26, வியாழக்கிழமை

தெஹ்யத்தகண்டிய பிரதேசத்தில் சமூக பராமரிப்பு நிலையம் திறப்பு

Kogilavani   / 2012 ஏப்ரல் 02 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}



(எம்.சுக்ரி)

தெஹ்யத்தகண்டிய  பிரதேசத்தில் 23 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சமூக பராமரிப்பு நிலைய கட்டிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க ஆகியோர் இக்கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

கிழக்கு மாகாண கல்வியமைச்சரின் வேண்டுகோளின் பேரில் சுகாதா அமைச்சர் சுபைரின் நிதியொதுக்கீட்டின் கீழ் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், பிரதேச சபை தலைவர், அரசாங்க அதிகாரிகள், எனபலரும் கலந்து கொண்டனர். இதன்போது மூக்குக் கண்ணாடிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் என்பனவும்; வழங்கிவைக்கப்பட்டன.

இதேவேளை, இப்பிரதேசத்தில் கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் பார்வையிட்டார்.

தெஹ்யத்தகண்டிய மாவட்ட வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தண்ணீர் தாங்கியின் அபிவிருத்தி வேலைகளை அமைச்சர் பார்வையிட்டதுடன் வைத்தியசாலையையும் பார்வையிட்டு நோயாளிகள் மற்றும் வைத்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

மேலும் இங்கு நிர்மாணிக்கப்பட்டுவரும் ஆயர்வேத வைத்தியசாலை கட்டிடத்தையும் அமைச்சர் பார்வையிட்டார்.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .