2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அக்கரைப்பற்று பிரதேச சபையின் உதவி தவிசாளருக்கு பிணை

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 04 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

அக்கரைப்பற்று பிரதேச சபையிலிருந்த கனணிகள் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள அக்கரைப்பற்று பிரதேச சபையின் உதவித் தவிசாளர் ஐ.எல்.ஏ.ஹக்கீம் நேற்று செவ்வாய்கிழமை அக்கரைப்பற்று நீதிமன்ற நீதவானால் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

மேற்படி குற்றச்சாட்டின் கீழ் அக்கரைப்பற்று பொலிஸார் தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பில் - உதவித் தவிசாளர் ஹக்கீம் நேற்று செவ்வாய்கிழமை அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் தனது சட்டத்தரணியுடன் ஆஜரானார். இதன்போதே – உதவித் தவிசாளரை ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்வதற்கு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதவான் எஸ்.சரவணராஜா உத்தரவிட்டார்.

அக்கரைப்பற்று பிரதேச சபையின் சொத்துக்களைத் சேதப்படுத்தியமை தொடர்பான மேற்படி வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் ஜுன் மாதம் 11ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும், அன்றைய தினம் எதிராளியை ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0

  • சிறாஜ் Friday, 06 April 2012 03:47 AM

    உங்கள் பிரதேச சபையில் என்ன நடக்குதுன்னு சொல்லுங்க முதல்ல.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .