2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்திற்கு இடைக்கால தடை

Super User   / 2012 ஏப்ரல் 04 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)

அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் 2012/2013ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்டத்தையும் புதிய நிருவாகிகளை தெரிவு செய்வதற்கான தேர்தலையும் நடத்துவதற்கு கல்முனை மாவட்ட நீதிபதி எம்.முகைதீன் இடைக்கால தடை உத்தரவு விதித்துள்ளார்.

'சங்கத்தின் யாப்பிற்கிணங்க 2011/2012ஆம் நடப்பாண்டுக்காக 2011 ஏப்ரல் 3ஆம் திகதி நடைபெற்ற தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட சங்க செயற்குழுவின் பதவி காலம் 2012 ஏப்ரல் 2ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

எனினும் 2012/2013ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்டத்தையும் புதிய நிருவாகிகளை தெரிவு செய்வதற்கான தேர்தலையும் நடத்துவதற்கு தற்போது உள்ள செயற்குழு எந்தவித தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை.

இதனால் 2012 ஏப்ரல் 2ஆம் திகதியுடன் அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் செயற்குழுவின் பதவியை இரத்து செய்வதுடன் யாப்பின் பிரகாரம் தேர்தல் நடந்துவதற்காக நீதிமன்றத்தினால் அல்லது நீதிமன்றத்தின் ஆலோசனையுடன் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் சுயாதீன குழுவை நியமிக்கும் படி' குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த மனு கடந்த மார்ச் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்முனை மாவட்ட நீதிபதி எம்.முகைதீனினால் விசாரிக்கப்பட்ட போதே இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டு கழக செயலாளர் ஏம்.எம்.இப்றாகீம், கல்முனை சனிமௌன்ட் விளையாட்டு கழக செயலாளர் எம்.ஐ.எம்.ஏ.மனாப், சாய்ந்தமருது பிளைன்ஹோர்ஸ் விளையாட்டு கழக செயலாளர் எஸ்.முஹம்மட் கான், மருதமுனை டொக்ஸா விளையாட்டு கழக தலைவர் யூ.எல்.றமீஸ், மருதமுனை யுனைட்டட் விளையாட்டு கழக செயலாளர் ஏ.எச்.எம்.ஹில்மி மற்றும் காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழக முகாமையாளர் ஜோன் சகாயநாதன் ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2011/2012ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளத்தின் தலைவர் ஏம்.ஏ.ஜமால் முஹம்மட், செயலாளர் இஸட்.ஏ.எச்.றஹ்மான், பொருளாளர் ஐ.எல்.சம்சுதீன், உப தலைவர்களான அப்பாஸ் எம்.நியாஸ், அலியார் பைசர், யூ.எம்.ஹனீபா மற்றும் வை.கே றஹ்மான் ஆகியோர் பிரதிவாதிகளாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மனு மீதான அடுத்த விசாரணை எதிர்வரும் ஏப்ரல் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .