2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அக்கரைப்பற்று மாநாகரசபை எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பில்லை, உறுப்பினர் வெளிநடப்பு

Kogilavani   / 2012 ஏப்ரல் 05 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

அக்கரைப்பற்று மாநகரசபையின் மு.கா. உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைருமான அஷ்ஷேய்க் எஸ்.எம்.எம். ஹனீபா மதனி இன்று இடம்பெற்ற அக்கரைப்பற்று மாநகரசபையின் மாதாந்த அமர்வில் கலந்து கொள்ளாமல் தடுக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவர் அநாகரீகமாக நடத்தப்பட்டமையினைக் கண்டித்தும் மாநகரசபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். தவம் இன்றைய சபை அமர்விலிருந்து வெளிநடப்புச் செய்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுளூ

அக்கரைப்பற்று மாநகரசபையின் மாதாந்த அமர்வில் கலந்து கொள்வதற்காக இன்றைய தினம் ஹனீபா மதனி சென்றபோது, சபைக்குள் செல்ல விடாமல் பொலிஸார் மூலம் தடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், இவ்வாறான நடவடிக்கையானது  மாநகரசபை உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமைக்குப் பங்கம் விளைவித்துள்ளதாகத் தெரிவித்தும், மாநகரசபை உறுப்பினரை பொலிஸார் மூலம் சபைக்குள் நுழைய விடாமல் தடுத்து அநாகரீகமாக நடந்து கொண்டமையினைக் கண்டிப்பதாகவும் கூறி  மாநகர சபை உறுப்பினர் தவம் சபையிலிருந்து இன்று வெளிநடப்புச் செய்தார்.

தனது வெளிநடப்புக் குறித்து உறுப்பினர் தவம் தெரிவிக்கையில்,

'ஹனீபா மதனி இந்த சபையின் ஒரு கௌரவ உறுப்பினராவார். இந்த சபையின் மாதாந்த அமர்வில் கலந்து கொள்வதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. எனவே, ஹனீபா மதனியை பொலிஸார் மூலம் இந்த சபைக்குள் நுழைய விடாமல் தடுத்தமையானது சபை உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமைக்கு பங்கம் விளைவிக்கும் ஒரு செயலாகும். சக உறுப்பினர் ஒருவரை இவ்வாறு அவமதித்தமையினை ஏனைய உறுப்பினர்கள் பார்த்துக் கொண்டு மௌனிகளாக இருக்கின்றார்கள் என்பதற்காக என்னாலும் அவ்வாறு இருக்க முடியாது. எனவே, மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹனீபா மதனியை சபைக்குள் நுழைய விடாமல் பொலிஸார் மூலம் தடுத்தமைக்கும், அவரின் சிறப்புரிமை மீறப்பட்டமைக்கும் எனது எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில் நான் வெளிநடப்புச் செய்தேன்' என்றார்.

இதேவேளை, 'மாநகரச சபை அமர்வில் இன்றைய தினம் கலந்து கொள்ளுமாறு சபையின் உறுப்பினர்களுக்கு அக்கரைப்பற்று மாநகரசபை ஆணையாளரினால் அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்த போதும், தனக்கு அவ்வாறான அழைப்புகள் எவையும் அனுப்பப் பட்டிருக்கவில்லை' என்று எதிர்க்கட்சித் தலைவர் ஹனீபா மதனிக்கு தெரிவித்தார்.

ஆயினும், அக்கரைப்பற்று மாநகரசபையின் கௌரவ உறுப்பினர் எனும் வகையில் அதன் மாதாந்த அமர்வில் கலந்து கொள்ளும் உரிமை தனக்கு இருப்பதால்தான்  தான் இன்றைய அமர்வில் கலந்து கொள்ளச் சென்றதாக ஹனீபா மதனி மேலும் கூறினார்.

கடந்த மாதாந்த அமர்வில் ஹனீபா மதனி கலந்து கொண்டபோதும், உறுப்பினர்கள் கையொப்பமிடும் புத்தகம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. எனவே, அந்த புத்தகத்தில் கையொப்பமிடுவதற்கு அனுமதிப்பதோடு, இன்றைய மாதாந்த அமர்வில் கலந்து கொள்வதற்குரிய அழைப்புக் கடிதத்தினை தனக்கு வழங்கி வைக்குமாறும் கோரி, தனது சட்டத்தரணி மூலம் அக்கரைப்பற்று மாநகரசபையின் ஆணையாளருக்கு ஹனீபா மதனி நேற்றைய தினம் கடிதமொன்றினை அனுப்பி வைத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.                                                                                                                                                                                                                                                          

You May Also Like

  Comments - 0

  • Avathaani Friday, 06 April 2012 06:45 AM

    அமைச்சர் அdsfsd...

    Reply : 0       0

    Mind Sunday, 08 April 2012 10:38 PM

    ஏன் நல்லாதானே போய்க்கிட்டு இருக்கு?

    Reply : 0       0

    ***மல்லிகை சிராஜ்***siro Saturday, 07 April 2012 04:55 PM

    அரசியல் சாக்கடை அல்ல இது ஒரு நல்ல ஒரு ...................
    ஆனால் நாம் தான் இதை, அதை போன்று ஆக்குவது. அஷ்ஷேய்க் எஸ்.எம்.எம். ஹனீபா மதனி அவர்கள். ஒரு கௌரவமான மனிதர் இவருக்கு .இவங்க அரசியல் இப்படிதான் .

    Reply : 0       0

    safana Saturday, 07 April 2012 04:34 AM

    இதுதானா நல்லாட்சி?

    Reply : 0       0

    சிறாஜ் Friday, 06 April 2012 08:20 PM

    இன்னும் ஒரு சட்டம் தெரியப்படுத்தனும் தம்பி அப்துல். சபை அமர்வு மூன்று என்றால் அது மூன்றும் 90 நாட்களை கடந்திருக்கனும் அந்த தொன்னூறு நாட்கள் நடந்த மூன்று சபைக்கு போகாமல் விட்டால்தான் சபை சட்டப்படி வெளியேறவேண்டும். அதில் வெளியேற்றப்பட்டாலும் கட்சி நினைத்தால் மீண்டும் அதே நபரை உள்ளே கொண்டு வரலாம். இதனையும் அப்துல் என்னும் தெரிந்து கொள்ளவும்.

    Reply : 0       0

    சிறாஜ் Friday, 06 April 2012 08:18 PM

    ஹலோ அப்துல் எங்களுக்கு சட்டம் தெரியாது. உமக்கும் உமது குதிரைப்படைக்கும் மட்டும்தான் சட்டம் தெரியும். மூன்று அமர்வுக்கு போகாவிட்டால் சபை யில் இருந்து வெளியேறத்தான் இடமுண்டு. ஆனால் மதனி 2சபைக்கு போகாமல் மூன்றாவது சபைக்கு போய் ஒப்பம் இட கொப்பியைக்கேட்ட போது இல்லை என்று மேயர் மறுத்தது தெரியுமா? இங்கே நடந்திருப்பது அநியாயம்.

    Reply : 0       0

    jaya Friday, 06 April 2012 08:06 PM

    Vaalha akp jananaayaham.

    Reply : 0       0

    சிறாஜ் Friday, 06 April 2012 02:51 PM

    தமிழ் மிரரின் அழகு போய் விட்டது. பழைய முறைதான் அழகா இருந்தது இது அவ்வளவு அழகும் வடிவும் இல்லை உரியவர்கள் கவனம் கொள்ளவும்.

    Reply : 0       0

    vaanmoli Friday, 06 April 2012 01:04 PM

    மாநகர சபை வாப்பா!

    Reply : 0       0

    சிறாஜ் Thursday, 05 April 2012 08:06 PM

    மனித நேயம் இருக்க படைத்தவனை வேண்டுகிறேன். தகப்பன் சொல்வதனைக் கேட்டு மக்களின் ஆணையைப் பெற்று சபைக்கு வந்திருக்கும் ஒரு உறுப்பினரை பொலிசாரை க்கொண்டு வரவிடாமல் தடுப்பது எந்த வகையில் நியாயம் இதுதான் அரசியல் சுதந்திரமா? நியாயம் அறிந்து படைத்தவனுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். எல்லாவற்றையும் கட்டியாளும் உரிமையை அல்லாஹ் யாருக்கும் இன்னும் கொடுக்கவில்லை.

    Reply : 0       0

    abdul Friday, 06 April 2012 05:43 AM

    மூன்று சபை அமர்வுகளுக்கு ஒரு உறுப்பினர் சபைக்கு செல்லாவிட்டால் சட்டப்படி மாநகர ,பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்ந்தும் சபை அங்கத்தவர்களாக செயட்பட முடியாது என்பது சட்டமாகும். இதை அறியாமல் கருத்து தெரிவிப்பவர்கள் தனது கருத்துக்களை அடக்கமாக தெரிவிப்பது ஒழுக்கமானது. எதனையும் பக்கசார்பாக தெரிவிப்பது ஊடக தர்மம் அல்ல. இவ் விடயம் சம்மந்தமாக சட்டம் தெரியாதவர்கள் தெரிந்து கொள்வது சிறப்பு அல்லவா.

    Reply : 0       0

    Riyas Friday, 06 April 2012 05:41 AM

    புலிக்கு பிறந்தது பூனையாகுமா ?

    Reply : 0       0

    சியாம் Friday, 06 April 2012 03:45 AM

    மாநர சபை என்பது ஒரு குட்டி பாராளுமன்றம் இங்கே நீதி நியாயம் தெரிந்தவர்களைத்தான் வைக்க வேண்டும்.

    Reply : 0       0

    ரசீன் Friday, 06 April 2012 03:42 AM

    மதனியை வெளியேற்றியது கண்டிக்க கூடிய விடயம். இதனை கேவலமாக நினைக்கிறேன். இது மாநகர சபையா மகன்னார்ர சபையா?

    Reply : 0       0

    abdullah` Friday, 06 April 2012 01:00 AM

    மதனி போன்ற உன்மையானவர்களுக்கு தே.க.வின் சபையில் நியாயம் கிடைக்காது தான் அதுவும் மா.சபையில் உள்ளதும் இரண்டு பீ.ஏ.பட்டதாரிகள் ஒன்று மி்ஸ்ரா் தவம், அடுத்தது நீங்கள். இதுக்குப்போய் அலட்டிக்கலாமா. வஸ்ஸலாம்.

    Reply : 0       0

    razeek Thursday, 05 April 2012 10:40 PM

    ஹனீபா மதனி இந்த சபையின் ஒரு கௌரவ உறுப்பினராவார். இந்த சபையின் மாதாந்த அமர்வில் கலந்து கொள்வதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. இதை தடுக்கும் அதிகாரம் மேயர்க்கு இல்லை. ஜனநாயக நாட்டில் அடாவடி அரசியல், வீட்டொ அதிகாரம் இதுக்கெல்லாம் காலம் பதில் சொல்லும் அடுத்த தேர்தலில்.

    Reply : 0       0

    meenavan Thursday, 05 April 2012 09:37 PM

    அக்கரைப்பற்று வெட்கபடுகிறது.

    Reply : 0       0

    சிறாஜ் Thursday, 05 April 2012 08:16 PM

    ஹனிபா மதனி நீங்கள் உங்கள் தலைவர் ஒரு ஜனாதிபதி சட்டத்தரணி அத்துடன் உங்கள் கட்சியில் நிறைய சிறந்த சட்ட வல்லுனர்கள் உள்ளார்கள் அவர்களின் உதவியுடன் கோட்டுக்கு போங்கள் நீதி நியாயமாக கிடைக்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .