2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மருதமுனையில் புதிய தபாலக கட்டிடம் திறப்பு

Super User   / 2012 ஏப்ரல் 06 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)


மருதமுனையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபாலக கட்டிடம் நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமினால் நேற்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.எம்.நஸீர், தபால் திணைக்கள அதிகாரிகள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றகீப், உமரலி, ஏ.அமீர், ஏ.எம். பறக்கத்துல்லா ஏ.ஏ.பஸீர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சுமார் 8 மில்லியன் ரூபா செலவில் இந்த தபாலக கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0

  • rizviya khan Friday, 06 April 2012 08:39 PM

    டும்.... டும் ... தலைவர் வந்துவிட்டார் அப்ப தேர்தல் வருது போல.

    Reply : 0       0

    AHAMED JUNAID Saturday, 07 April 2012 12:16 AM

    அமைச்சர் தபால் அமைச்சராக இருந்த போது சாய்ந்தமருது தபாலகக் கட்டடத்தை சீர் செய்து தாருங்கள் என்று இப்பிரதேச மக்கள் சார்பாக பலர் கேட்டிருந்தனர். இன்று இவர் நீதி மந்திரியாகி விட்டார் மருதமுனை மக்கள் அதிஸ்டசாலிகள். வாழ்த்துக்கள் .

    Reply : 0       0

    Avathaani Saturday, 07 April 2012 12:40 AM

    தபால் அமைச்சராக இருந்த சொற்பகாலத்தை பிரயோசனமாகியதன் விளைவே இது என்பதை தலைவரை குறைகூறுபவர்கள் விளங்கிக்கொண்டால் சரி...

    ரியாஸ் கானின் கருத்து நகைச்சுவையாகவும் மரியாதையாகவும் இருக்கிறது....

    Reply : 0       0

    சிறாஜ் Saturday, 07 April 2012 07:32 PM

    தலைவர் தபால் தொலைத்தொடர்பு அமைச்சராக இருக்கும் போதுதான் அட்டாளைச்சேனை தபாலகத்துக்கும் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் தலைவர் மாறியதன் பின்னர் குதிரையில் வந்து ஒருத்தர் கல்லில் பெயர் வைத்து விட்டு போயிருக்கார். அதுதான் ஊரார் கோழி வாப்பாட கத்தம்.

    Reply : 0       0

    meenavan Saturday, 07 April 2012 10:39 PM

    @சிராஜ்,, ஊரார் கோழி வாப்பாட கத்தம், நமது அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் பொருத்தம், விதிவிலக்கு மர்ஹூம் தலைவர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .