2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சபையின் அனுமதியின்றி வேலைத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன: அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்

Super User   / 2012 ஏப்ரல் 06 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

நெல்சிப் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று மாநகர சபையால் மேற்கொள்ளவுள்ள பூங்கா அமைப்பு வேலைக்கான விலை மனுக்கோரல் மற்றும் கொடுத்தல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பில் சபையின் அங்கீகாரம் பெறாமல், அந்த வேலையினை குறித்ததொரு நபருக்கு வழங்கியமையானது சட்டத்துக்கு முரணானதொரு செயற்பாடாகும் என மாநகர சபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். தவம் குற்றம் சாட்டினார்.

அக்கரைப்பற்று மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்ட குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

இது தொடர்பில் உறுப்பினர் தவம் அங்கு மேலும் தெரிக்கையில்ளூ

"நெல்சிப் திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட நிதியின் மூலம் அக்கரைப்பற்று மாநகர சபையால் 02 பூங்காக்கள் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் ஒரு பூங்காவுக்கான நிதி 01 கோடியே 25 லட்சமாகும்.

இந்த பூங்காவினை அமைக்கும் வேலையினை இங்குள்ள ஒருவர் தனது 'பினாமி'யின் மூலம் பெற்றுள்ளார். விலை மனுக்கோரல் ஒன்றின் மூலமே இவ்வாறான வேலைகளை வழங்க வேண்டும்.

அவ்வாறானதொரு விலைமனுக் கோரப்பட்டமை தொடர்பிலோ, வேலையினைக் கொடுத்தமை தொடர்பிலோ இந்த சபைக்கு அறிவிக்கப்படவுமில்லை, சபையின் அங்கீகாரம் பெறப்படவுமில்லை. 

வெளிப்படைத் தன்மையும், நல்லாட்சிக்கான பண்பும் அக்கரைப்பற்று மாநகர சபையின் நிருவாகத்தில் எப்போதும் இருக்கும் என்று - இந்த சபை பொறுப்பேற்கப்பட்ட நிகழ்வில் கூறப்பட்டது. ஆனால், 01 கோடியே 25 லட்சம் ரூபாய் பெறுமதியானதொரு வேலையானது திரை மறைவில் வழங்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று மாநகர சபையின் வெளிப்படைத் தன்மையும், நல்லாட்சியும் இவைகள் தானா? உலக வங்கியின் பணத்தினை நெல்சிப் திட்டத்தினூடா பெற்று அக்கரைப்பற்று மாநகரசபையினர் இந்த வேலைத்திட்டங்களைச் செய்கின்றனர்.

எனவே, இந்த நிதிக் கையாளுகைகள் தொடர்பில் மாநகர சபையின் உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தப்படல் அவசியமாகும். இது ஒருபுறமிருக்க, அக்கரைப்பற்று மக்களுக்கு இப்போதைய அவசரத் தேவை – பூங்காக்கள் அல்ல.

மின்சாரம், கல்வி, நீர்பாசனம் என – பூர்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் எவ்வளவோ இருக்கின்றன. அவைகளை நிறைவு செய்து கொடுத்த பின்னர் தான் நாம் பூங்காக்கள் பற்றி யோசிக்க வேண்டும" என்றார்.

இந்த உரையின் பின்னர், சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹனீபா மதனி – அமர்வில் கலந்து கொள்ளவிடாமல் தடுக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உறுப்பினர் தவம் சபை அமர்விலிருந்து வெளிநடப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • ranees Saturday, 07 April 2012 03:07 AM

    //அக்கரைப்பற்று மக்களுக்கு இப்போதைய அவசரத் தேவை – பூங்காக்கள் அல்ல.

    மின்சாரம், கல்வி, நீர்பாசனம் என – பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் எவ்வளவோ இருக்கின்றன. அவைகளை நிறைவு செய்து கொடுத்த பின்னர் தான் நாம் பூங்காக்கள் பற்றி யோசிக்க வேண்டும" என்றார்.//

    இந்தக் கருத்து மிக முக்கியமானது. அமைச்சர் அதிக வேலைகளைச் செய்திருக்கிறார்.
    அவைகள் யோசிக்காமல் செய்தவைதான். யோசித்து செய்திருந்தால் அதில் அதிக பலன் இருந்திருக்கும்.

    Reply : 0       0

    சிறாஜ் Saturday, 07 April 2012 03:54 AM

    சபாஷ் தவம் அவர்களே. அக்கரைப்பற்று மாநகர சபை, பிதேச சபை இரண்டும் என்ன செய்கிறது? மக்களுக்கு சேர வேண்டியது எதுவும் சரியான முறையில் மக்களிடம் சென்றடைவதாகத் தெரியவில்லை. சபையில் தவமும் ஹனீபா மதனியும் இல்லாவிட்டால் கொட்டிப்புறிக்கும் வேலைதான் நடக்கும் என்று நினைக்கிறேன். இதுக்குத்தான் குதிரை வந்ததா? மக்கள் பாவம் ? அவதானம் தேவை ....

    Reply : 0       0

    சிறாஜ் Saturday, 07 April 2012 05:14 AM

    மண் கொட்டுவது என்றால் அக்கரைப்பற்று அமைச்சருக்கும் அட்டாளைச்சேனை அமைச்சருக்கும் ரெம்ப பிரியம்.

    Reply : 0       0

    lavanas Saturday, 07 April 2012 05:25 AM

    என்ன தவம் சேர் உங்க காலத்திலும் இந்த கல்வி மின்சாரம் நீர்பாசனம் எல்லாம் இப்படித்தான் இருந்தது.நீங்க கொண்டராட்டு செய்தவைஹளை பட்டியல் போடட்டுமா?

    Reply : 0       0

    அகரையூரான் Sunday, 08 April 2012 04:51 PM

    எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.. நீங்க தவிசாளரா இருக்கும் போது இருந்த அதே ஊர்தானே.. உங்க சொந்த நிகழ்ச்சி நிரலுக்காக இப்ப மாறி பேசுறீங்க... நீங்களும் ஒங்குட அரசியலும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .