2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் வீடுகள் கையளிக்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஏப்ரல் 07 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சி.அன்சார்)

சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் விதவைகளுக்கு சமுர்த்தி அதிகாரசபையினால் 'திரியபியச' எனும் வேலைத் திட்டத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிக்கும் வைபவம் இன்று காலை  சனிக்கிழமை சம்மாந்துறையில் இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சுர் தமைமையில் இடம்பெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் ஆகியோர் கலந்து கொண்டு வீடுகளை கையளித்தனர்.

இங்கு, அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்சாத், அம்பாறை மாவட்ட சமுர்த்தி அதிகாரசபையின் இணைப்பாளர் ஐ.எம்.அலியார்,  பிதேச சபை உறுப்பினர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள், மற்றும் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

இதன்போது, ஒரு இலட்சம் பெறுமதியான தலா இரண்டு வீடுகள் கையளிக்கப்பட்டன.






You May Also Like

  Comments - 0

  • Atham manal Sunday, 08 April 2012 12:07 PM

    நல்ல சேவை எனது பாராட்டுக்கள்
    மௌலவி. கே.எல்.Atham பாவா (மதனி)
    சம்மாந்துறை

    Reply : 0       0

    avathanee Saturday, 14 April 2012 10:22 PM

    திறந்து வைத்தது லட்சம் பெருமதியானே வீடுகள். இதற்கு போயி ஒரு விழா. நிலைமை அவ்வாறு மாறிட்டுது.

    Reply : 0       0

    சிறாஜ் Sunday, 15 April 2012 02:36 AM

    அயலூரு காகம் வந்து சொந்த ஊரு காகத்தை கொத்தி விரட்டிய கதை தெரியுமா உங்களுக்கு:

    ஏதோ ஒரு முறையில் கட்டப்பட்ட வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கும் விழா ஏற்றுக்கொள்கிரோம் ஆனால் தவிசாளர் நெளஷாத் இவர்களைப்போல் போட்டோக்கு போஸ் கொடுக்க விரும்பாத நல்ல மனிதர். இங்கு வந்தவர்களில் நல்ல படித்த ஒருவர் பன்பானவர் ஒரு சிறந்த உயர் நீதிமன்ற சட்டத்தரணி சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர் முஸ்தபா அந்த விழாவில் ஒரு ஓரமாக அமைதியாக நின்று கொண்டிருக்கிரார்.

    Reply : 0       0

    சிறாஜ் Sunday, 15 April 2012 02:38 AM

    அந்த மனிதரின் பெயரைக் குறிப்பிடாமல் எங்கிருந்தோ ஊரான் கோழியில் அப்பன் கத்தம் ஓதவந்தவர்களின் பெயர்கள் மட்டும் போடப்பட்டுள்ளது. இது நியாயமா சொல்லுங்கள். பொதுவாக சிந்திக்கும் நண்பர்களே குதிரைவால் ஆலோசனை இல்லாமல் சொந்த கருத்தை மட்டும் சொல்லுங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .