2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மரண ஆதார சங்கங்களுக்குத் தேவையான உபகரணங்கள் கையளிப்பு

Kogilavani   / 2012 ஏப்ரல் 10 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


தமண பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த 4 மரண ஆதார சங்கங்களுக்குத் தேவையான உபகரணங்களை அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வழங்கி வைத்தார்.

தமண பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாநகரபுர பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வைபவமொன்றில் வைத்து நடாளுமன்ற உறுப்பினர் பியசேன மேற்படி உபகரணங்களை குறித்த சங்கங்களின் பிரதிநிதிகளிடம் கையளித்தார்.

ஒலிபெருக்கிகள், நாற்காலிகள் மற்றும் மண்வெட்டிகள் ஆகிய பொருட்கள் குறித்த சங்கங்களுக்கு வழங்கப்பட்டன.

மாநகரபுர தோட்டம், மாந்தோட்டம் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 4 மரண ஆதார சங்கங்களின் பிரதிநிதிகள் மேற்படி பொருட்களை நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

இதேவேளை, தனது சொந்த நிதியின் மூலம் மாநகரபுர பௌத்த விகாரை ஒன்றில் அமைக்கப்பட்ட புத்தர் சிலையொன்றினையும் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன பார்வையிட்டார்.

இந் நிகழ்வுகளில், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் திருமதி பியசேன விஜயகுமாரி, திருக்கோவில் பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்தம்பி விக்னேஷ்வரன், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் அதிபர் எம்.ஐ.எம். றியாஸ் மற்றும் மாந்தோட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





                                                                                                                                                                                                       

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .