2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தாமரைக்குளம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தல் உயிரிழப்பு

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 14 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

திருக்கோவில், தாமரைக்குளம் பிரதேசத்தில் மாட்டுப் பட்டியில் மாட்டுப் பால் எடுப்பதற்காக சென்ற ஒருவரை காட்டுயானை தாக்கியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

தாமரைக்குளம் பிரதேசத்தில் உள்ள தனது மாட்டுப் பட்டிக்கு வழமைபோல பால் எடுப்பதற்காக சென்றிருந்தவேளை காட்டுயானை தாக்கியதில் மண்டானை சுனாமி வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த கும்பஸ்தவரான 54 வயதுடைய சுப்பிரமணியம் கோணேசமூர்த்தி படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக திருக்கோவில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருவதுடன் கடந்த வாரம் கஞ்சிக்குடியாறு பிரதேசத்தில் யானை தாக்குதலினால் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .