2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கைவிடப்பட்ட குழந்தை கல்முனை வைத்தியசாலையில் ஒப்படைப்பு

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 15 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)

கைவிடப்பட்ட இரண்டரை மாதக் பெண் குழந்தையொன்று கல்முனை ஆதார வைத்தியசாலையில் பொலிஸாரினால் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கல்முனை சி.டி.பி.பஸ் தரிப்பு நிலையத்தில் இக்குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த மட்டக்களப்பு, பாலமுனை கிராமத்தைச் சேர்ந்த நவரட்டினா என்ற பெண் இந்த இரண்டரை மாதக் குழந்தையை பொலிஸாரிடம்  ஒப்படைத்துள்ளார்.

தனக்கு அறிமுகமில்லாத பெண்ணொருவர், தான் கடையில் பொருட்கள் வாங்கி வரும்வரை இக்குழந்தையை வைத்திருக்குமாறு தன்னிடம் குழந்தை தந்துவிட்டுச் சென்றதாகவும் இருப்பினும் அப்பெண் நீண்டநேரமாக வராத நிலையில் தான் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததாகவும் பொலிஸாரிடம் குழந்தையை ஒப்படைத்த  நவரட்டினா கூறினார்.

கல்முனை பொலிஸார் இக்குழந்தையை  கல்முனை ஆதார வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் தற்காலிக பராமரிப்புக்காக ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0

  • SAMOOHAN Monday, 16 April 2012 02:03 AM

    பொருளாதார கஷ்டம் இப்படியும் விளையாடுது. இது அரசின் கவனத்துக்கு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .