2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பொலிஸ், பொதுமக்கள் தொடர்பாடல் நிகழ்வு

Kogilavani   / 2012 ஏப்ரல் 18 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா)
அக்கரைப்பற்று 12ஆம் பிரிவு சிவில் பாதுகாப்புக் குழுவின் ஏற்பாட்டில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பாடல் நிகழ்வு அக்கரைப்பற்று ஹிறா ஆங்கில பாடசாலையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

சிவில்பாதுகாப்புக் குழவின் தலைவர் எம்.பி. முகைதீன் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹாஜா முகைதீன் பொலிஸாரின் கடமைகள், சட்டங்கள் மற்றும் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இருக்க வேண்டிய தொடர்புகள் பற்றி பொது மக்களுக்க விளக்கமளித்தார்.

இந்நிகழ்வின் இறுதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் நுளம்பு வலைகள் என்பன வழங்கப்பட்டன.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .