2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சலவை இயந்திரத்திலிருந்து மூண்ட தீயில் அகப்பட்டு பெண் மரணம்

Kogilavani   / 2012 ஏப்ரல் 19 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏஸ்.மாறன்)

கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் சலவை இயந்திரத்தில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கினை தொடர்ந்து ஏற்பட்ட தீயில் அகப்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்

சாய்ந்தமருது ஒராபிபாஷா வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய முஹம்மத் ஹனிபா ரிஸ்வானா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி பெண் சலவை இயந்திரத்தினுள் ஆடைகளை கழுவிகொண்டிருந்த நிலையில் மின்சார ஒழுக்கு ஏற்பட்டு குறித்த இயந்திரம் தீப்பற்ற தொடங்கியுள்ளதுடன் இத்தீயில் குறித்த பெண்ணும் சிக்கிக்கொண்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது அஷ்ரப்  ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .