2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கவிஞர் சண்முகம் சிவலிங்கம் காலமானார்

Super User   / 2012 ஏப்ரல் 20 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின்  புகழ்பெற்ற கவிஞரும், விமர்சகரும், சிறுகதையாளருமான சண்முகம் சிவலிங்கம் இன்று  காலமானார்.

பாண்டிருப்பிலுள்ள அவரின் வீட்டில்  இன்று வெள்ளிக்கிழமை மாரடைப்பு காரணமாக அவர் காலமானார் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை பாண்டிருப்பில் 1939 ஆம் ஆண்டில் பிறந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம், இந்தியாவின் கேரள மாநிலத்தில் உயர்கல்வி பயின்று அறிவியல் துறையில் பட்டம்பெற்றவராவர். ஆசிரியராக  பின்னர் பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றிருந்தார். பல்வேறு நூல்களை அவர் வெளியிட்டிருந்தார்.

இலக்கியவாதிகள், விமர்சகர்கள் பலர் சண்முகம் சிவலிங்கத்தின் மறைவு குறித்து  கவலை  தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .