2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பள்ளிவாசல் உடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பி.க்கள் பதவிகளை ராஜினாமா செய்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 24 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

தம்புள்ள பள்ளிவாசல் உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தைரியமாக முஸ்லிம் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக தமது பதவிகளை இராஜனாமா செய்து அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்;பை தெரிவிக்க வேண்டும் எனவும் பள்ளிவாசல் உடைக்கப்பட்டதை தான் வன்மையாக கண்டிப்பதாகவும்  தேசிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அக்கரைப்பற்று பிரதேச பிரதி தவிசாளர் ஜ.எல்.ஏ.ஹக்கீம் தெரிவித்தார்.

கடந்த வாரம் தம்புள்ள பள்ளிவாசல் உடைக்கப்பட்டதை கண்டித்து அக்கரைப்பற்று பிரதேச பிரதி தவிசாளர் ஜ.எல்.ஏ.ஹக்கீமினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிறுபான்மை இனங்களின் வணக்கஸ்தலங்கள் உள்ள பிரதேசங்களில் புனிதபூமி என்ற பெயரில் அனுராதபுரம், தீகவாபி, வரிசையில் தம்புள்ள பிரதேசத்தில் முஸ்லிம் பள்ளிவாசலை அகற்ற சில பௌத்த மதகுருமார்கள் முயற்சித்து வருகின்றனர். இவ்வாறான செயற்பாடு தொடர்ந்தால் இந்த நாட்டில் சிறுபான்மை இனங்களின் வணக்கஸ்தலங்கள் எதிர்காலத்தில் இருக்க முடியாதநிலை ஏற்படவுள்ளது.

எமது அக்கரைப்பற்று பிரதேசத்தில் நகரை அண்மித்த பகுதியில் பௌத்த விகாரை, இந்து ஆலையம், பள்ளிவாசல் என்பன அருகருகே உள்ளன. மூவினங்களும் தமது வழிபாடுகளை சகோதரத்துவமாக இணைந்து மேற்கொள்கின்றனர்.

இவ்வாறான நிலையில் இலங்கை அரசியல் யாப்பு இத்தீவில் வாழுகின்ற சகல இனங்களும் தங்களது மதங்களை பின்னற்றவும் வணக்கஸ்தலங்களை அமைக்கமுடியும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது ஆனால் இன்று சிறுபான்மை இனங்களின் வணக்கஸ்தலங்களை குறிவைத்து சில பௌத்த மதகுருமார்களும் பெரும்பான்மை இனத்தவர்கள் செயற்படுகின்றனர்.

கடந்த காலங்களில் தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காகவே அவ்விளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள். அதேபோன்று முஸ்லிம் இளைஞர்களையும் ஆயுதம் ஏந்தி போகச்செய்ய எத்தனிக்க வேண்டாம் என ஜனாதிபதியை வினயமாக வேண்டிக்கொள்கின்றேன்.

இந்நிலையில் உடைக்கப்பட்ட பள்ளிவாசலுக்கு பதிலாக மாற்றுக்காணி ஒன்று வழங்கப்படும் என பிரதமர் கூறியுள்ளார். எனவே இந்த பள்ளிவாசல் வேறு இடத்தில் அமைக்கவேண்டிய தேவையில்லை என்பதுடன் பள்ளிவாசல் உடைப்பு சம்பவத்தை வண்மையாக கண்டிப்பதுடன் இந்த செயலைக் கண்டித்து முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்து நீதிமன்றத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும். அதேவேளை சம்பவ இடத்தில் கடமையில் ஈடுபட்ட பொலிஸாருக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவ்வறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .