2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்பு செயலாளர் பதவியிலிருந்து மௌலவி முபாரக் இராஜினாமா

Super User   / 2012 ஏப்ரல் 24 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்பு செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக மௌலவி முபாரக் அப்துல் மஜீத் அறிவித்துள்ளார்.

இந்த இராஜினாம தொடர்பான கடிதத்தினை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சர் றிசாட் பதியுத்தீனுக்கு இன்று செவ்வாய்க்கிழமை அனுப்பிவைத்துள்ளார்.

"அத்துடன் நான் இக்கட்சியில் இணைந்து சுமார் இரண்டு வருடங்களாகி விட்டன. இக்கால பகுதிக்குள் என்னால் முடிந்தளவு கட்சியை ஊடகமயப்படுத்தவும், வளர்த்தெடுக்கவும் பணியாற்ற கிடைத்ததையிட்டு  மகிழ்ச்சியடைகின்றேன்.

ஆனால் நாடு இன்றிருக்கும் சூழலில் தனிப்பட்ட நலன்களுக்கு அப்பால் முஸ்லிம் சமூகத்துக்கான உரிமை குரலாக நான் இயங்குவதே இறைவனுக்கு பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். அந்த வகையில் நான் உலமா கட்சியை அரசியலில் முன்னெடுத்து செல்லவுள்ளேன்.  
இதேவேளை சமூகத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் தங்களுக்கும் இக்கட்சியின் முக்கியஸ்தர்களான பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா, மாகாண அமைச்சர் சுபைர் மற்றும் முன்னாள் அமைச்சர் அமீர் அலி ஆகியோருக்கு எனது தனிப்பட்ட ஆதரவு எப்போதும் இருக்கும்.

அத்துடன் இந்த ராஜினாமா தனிப்பட்ட வகையில் நமக்கிருக்கும் பற்றுறுதியில் எத்தகைய விரிசலையும் ஏற்படுத்தாது என்பது எனது நம்பிக்கை' என குறித்த கடிதத்தில் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளார்.

இக்கடிதத்தின் பிரதி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீடுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .