2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வீதி புனரமைப்பின் போது கைக்குண்டு மீட்பு

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 25 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை, மகாஓயா பிரதேசத்தில் வீதி புனரமைப்பு வேலையின் போது நிலத்தில் மறைத்து வைக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றை நேற்று செவ்வாய்க்கிழமை காலையில் மீட்கப்பட்டுள்ளதாக மாகாஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

மகா ஒயா சுடுநீர் கிணறு வீதியை புனரமைப்பதற்காக சம்பவதினமான செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில வீதியை தொழிலாளர்கள் தோண்டும் போது நிலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பொதி ஒன்றை கண்டு அதனை பிரித்த போது அதற்குள் கைக்குண்டு ஒன்று இருப்பதையடுத்து பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பொலிஸார் கைக்குண்டை மீட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை மகாஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .