2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மலேரியா விழிப்புணர்வு கருத்தரங்கு

Kogilavani   / 2012 ஏப்ரல் 25 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தின் ஏற்பாட்டில் மலேரியா விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று புதன்கிழமை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பிரதேச வைத்திய அதிகாரி டாக்டர் பறூஸா நக்பர் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில்  பிரதேச ஊடகவியலாளர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொது சௌக்கிய மாதுக்கள் கலந்துகொண்டனர்.

மலேரியாவின் ஆபத்துக்கள், இதனை தடுப்பதற்கான வழிமுறைகள், தற்போது இலங்கையில் இதன் தாக்கம் பற்றி விரிவாக புள்ளி விபரங்களின் அடிப்படையில் வைத்திய அதிகாரியினால் எடுத்துரைக்கப்பட்டது.

இலங்கையில் மலேரியாவின் தாக்கம் வெகுவாக குறைவடைந்து செல்லும் இதேவேளை அயல் நாடுகளிலிருந்து வரும் பயணிகளினால் மலேரியா கொண்டுவரப் படுவதாகவும் இதனையும் முற்றாக தடுப்பதற்கான முயற்சிகளை சுகாதார திணைக்களம் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .