2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வீதிகளை புனரமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2012 மே 11 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)

திருக்கோவில், கஞ்சிகுடியாறு, வேப்பங்குளம், தங்கவேலாயுதபுரம் ஆகிய  வீதிகளை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடனும்  ஒக்ஸ்பாம் ஜிபி. நிறுவனத்தின் அனுசரணையுடன்  அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு அமைப்பினால் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கஞ்சிகுடியாறு, வேப்பங்குளம் வீதிகள் 2.2 மில்லியன் ரூபா செலவிலும் 5 மில்லியன் ரூபா செலவில் தங்கவேலாயுதபுரம் அரசர் வீதியும் புனரமைக்கப்படவுள்ளன.

ஒக்பாம் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி, ஒக்ஸ்பாம் நிறுவன வடக்கு, கிழக்கு முகாமையாளர் எம்.யேகேஸ்வரன், கமநல சேவை அபிவிருத்தி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.யோகேஸ்வரன், தம்பிலுவில் கமநல கேந்திர நிலைய பேரும்போக உத்தியோகத்தர் எம்;.சிதம்பரநாதன், சுவாட் நிறுவன உத்தியோகத்தர்கள் இதற்கான நிகழ்வில் கலந்துகொண்டனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .