2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான மு.க. வேட்பாளர்கள் குறித்து தீர்மானமில்லை: பஷீர்

Menaka Mookandi   / 2012 மே 11 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களென எவரொருவரையும் கட்சி இதுவரை பெயர் குறித்துத் தீர்மானிக்கவில்லை என்றும், கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் மு.கா. சார்பில் போட்டியிடுபவர்கள் தொடர்பில் முடிவுகள் எட்டப்பட்டதாக வெளிவந்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் மு.காங்கிரஸின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைக்கான அடுத்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை மு.காங்கிரஸ் தெரிவு செய்து விட்டதாக, ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து வினவிய போதே அவர் மேற்கண்ட பதிலை வழங்கினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'கிழக்குத் தேர்தலில் மு.கா. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரென - கட்சி இதுவரை தீர்மானிக்கவில்லை. தேர்தல் தொடர்பான விழிப்பூட்டும் நடவடிக்கைகளில் மட்டுமே தற்போது நாம் ஈடுபட்டு வருகிறோம்.

அலிசாஹிர் மௌலானாவுக்கு கிழக்கு மாகாணசபைக்கான முதலமைச்சர் பதவியினை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியை நான் சந்தித்துப் பேசியதாக கதையொன்று அவிழ்த்து விடப்பட்டுள்ளது. ஆனால், அரசியலைப் பொறுத்தவரை முஸ்லிம் காங்கிரஸ் எனும் ஸ்தாபன ரீதியான நடவடிக்கைகளில் மட்டுமே நான் ஈடுபட்டு வருகிறேன். தனி நபர் ரீதியான எந்தவித அரசியல் செயற்பாடுகளிலும் நான் இறங்கியதுமில்லை, தனிநபர் அரசியலுக்குத் துணைபோனதுமில்லை.

இலங்கை முஸ்லிம்களுக்கான அரசியல் அதிகாரம் எனும் விடயத்தில் 2012 ஆம் ஆண்டினை ஒரு கால இலக்காக மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் முன்;னறிவுப்புச் செய்துள்ளார்கள். உண்மையில் இந்தக் கால இலக்கானது அவருடைய ஆன்மாவின் வெளிப்பாடு என்றுதான் நான் நினைக்கின்றேன்.

அந்தவகையில், தலைவர் அஷ்ரப் அவர்கள் நிர்ணயம் செய்த கால இலக்கில் முஸ்லிம்கள் அடைந்து கொள்ள வேண்டிய அரசியல் அந்தஷ்துக் குறித்தே நாம் இப்போது சிந்தித்து வருகின்றோம்.

தற்போதைய நிலையில், ஓட்டு மொத்த இலங்கை முஸ்லிம்களின் அரசியல் அந்தஸ்தினையும்  கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களே நிர்ணயிக்க வேண்டிய அவசியத்தில் உள்ளனர்' என்றார்.

You May Also Like

  Comments - 0

  • meenavan Friday, 11 May 2012 05:56 PM

    உங்களுக்கு முதலமைச்சர் ஆசை இல்லையா?

    Reply : 0       0

    ummpa Saturday, 12 May 2012 02:38 AM

    ஜயா! நீங்கள் முழு மூச்சாக ஈடுபடுங்கள். அப்போதாவது உங்களின் வாக்குபலத்தை அதிகரிகமுடியுமா என்பதை பார்க்கலாம். மக்கள் தீர்மானிக்கட்டும் அதக்கு கட்சி மூன்று நபர்களின் பெயர்களை வெளி இடட்டும். அப்போது மக்களின் தெரிவுக்கு உடன்படுவோம். நீங்கள் எல்லாம் தேசியப்பட்டியல் ஆகவே நாங்கள் தீர்மானிப்போம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .