2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

விவசாயிகளுக்கு பயிற்சி செயலமர்வு

Suganthini Ratnam   / 2012 மே 24 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா,எஸ்.மாறன்)

காலம் கடந்த மற்றும் இளம் பழம் தரக்கூடிய மரங்களை கத்தரிப்பதன் ஊடாக சிறந்த அறுவடைகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பான பயிற்சி செயலமர்வு மத்தியமுகாம் - 02ஆம் பிரிவில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட விவசாயி;களுக்கே  இச்செயலமர்வு நடத்தப்பட்டது. 

கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் அம்பாறை பிரதிப் பணிப்பாளர் ரீ.குகநாதன் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி எஸ்.நந்தகுமார், விவசாயத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ்.திஸாநாயக்க உட்பட விவசாய போதனாசிரியர்கள், பல அதிகாரிகள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • najeem Thursday, 24 May 2012 04:36 PM

    கட்டாயம் இந்த கிராம மக்களுக்கு தேவையான பயிற்சியாகும் வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .