2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இந்திய உயர் ஸ்தானிகர் கல்முனைக்கு விஜயம்

Super User   / 2012 மே 26 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான்,ஏ.ஜே.எம்.ஹனீபா)

இந்திய உயர்ஸ்தானிகர்  அசோக் கே. காந்தா, கல்முனை மாநகர பிரதி முதல்வர் நிஸாம் காரியப்பரின் வேண்டுகோளுக்கிணங்க  கல்முனைக்கு இன்று காலை விஜயம் செய்தார்.

கல்முனை மாநகர பிரதிநிதிகள், கல்முனை மாநரக பிரதேசத்திற்குட்பட்ட வர்த்தக அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஊடகவியலாளர்கள் ஆகியோர்களுடன்  கல்முனை இருதய நாதர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட  கலந்துரையாடல் நிகழ்வில் இந்திய  உயர் ஸ்தானிகர் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர அபிவிருத்தி, கல்முனை மாநகர பிரதேசத்தில் காணப்படும் தேவைப்பாடுகள்இ இந்திய அரசினால் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளவிருக்கும் வீடமைப்பு வேலைத்திட்டம் போன்றவை பற்றி கலந்துரையாடப்பட்டன.

கல்முனை மாநகர பிரதி முதல்வர் நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரி அனுரங்கா, நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுச்செயலாளருமான ஹஸன் அலி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.ஏ. மஜீட், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி உட்பட மாநகர சபை உறுப்பினர்கள், வர்த்தக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலின் இறுதியில் கல்முனை மாநகர தேவைப்பாடுகள், அபிவிருத்தி தொடர்பான பரிந்துரையினை கல்முனை மாநகர பிரதி முதல்வர் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளித்தார்.









You May Also Like

  Comments - 0

  • meenavan Saturday, 26 May 2012 03:57 PM

    நேற்று,இன்று இரு தினங்களிலும் கல்முனை மாநகரில் இடம்பெற்ற நிகழ்வுகளில், மக்கள் தெரிவு பாராளுமன்ற பிரதிநிதி ஹரிஸ் கலந்து கொள்ளாமையின் காரணம் யாதோ?

    Reply : 0       0

    neethan Saturday, 26 May 2012 04:15 PM

    இங்கே ஹனிபாவும் கலந்து கொணடார்.

    Reply : 0       0

    AHAMED JUNAID Saturday, 26 May 2012 04:31 PM

    இது என்ன? மேயரும் உதவி மேயரும் பிரிந்து செயல்படுவது போலத் தெரிகின்ரறது. இருவரும் இனைந்து கருமமாற்றினால் பிரதேசம் அபிவிருத்தி கானும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .