2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கல்முனை மாநகர சபையினால் 'மாநகர முத்துக்கள்' சாதனையாளர்கள் கௌரவிப்பு

Super User   / 2012 மே 26 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                               
  (அப்துல் அஸீஸ் )


கல்முனை மாநகர சபையின் ஏற்பாட்டில் சாதனையாளர்கள் கௌரவிக்கும் 'மாநகர முத்துக்கள்'  விழா நேற்று மாலை சாய்ந்தமருது கடற்கரை பூங்கா வெளியில் இடம்பெற்றது.

இவ்விழாவில் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகளில் ஜி.சி.ஈ. உயர்தரம், ஜி.சி.ஈ. சாதாரண தரம், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் ஆகியவற்றில் உயர்ந்த பெறு பேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், மாநகர அபிவிருத்திக்காக உழைத்த மாநகர சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்களும் கௌரவிக்ப்பட்டனர்.

அரசியலில் ஐம்பது வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்த 80வயதினை அடைந்த முன்னால் கல்முனை மாநகர முதல்வரும், செனட்டருமான எஸ்.இஸட். மசூர்மௌலானாவும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

கல்முனை மாநகர முதல்வர் கௌரவ கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றவூப் ஹக்கீம் கலந்துகொண்டார்.
 கௌரவ அதிதிகளாக பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத், நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.டீ.ஹஸன் அலி, திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோரும் பங்குபற்றினார்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், எம்.ஏ.மஜீட், கல்முனை மாநகர சபை பிரதி மேயர் நிசாம் காரியப்பர், முன்னால் கல்முனை மாநகர முதல்வர் எஸ்.இஸட்.மசூர் மௌலானா உட்பட மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை அதிகாரிகள் அரசியல் பிரமுவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.







You May Also Like

  Comments - 0

  • SLAHY-سلاهي Sunday, 27 May 2012 08:16 AM

    கல்முனை மாநகர முத்துக்கள் என்ற போர்வையில், இது ஒரு வெறும் அரசியல் மேடை மட்டுமே…… எமது சமூகம் இன்னமும் விழிக்கவில்லை. மாநகர முத்துக்கள் என்று அரசியல் முகங்களைத்தவிர வேறு யாரையும் இம்மேடையில் காணவில்லை. மாநகர முத்துக்களன கல்விமான்கள் போன்றோர் எங்கே!!! இவை கவனத்தில் கொள்ள வேண்டியவை......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .