2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

புதிய வீதிகளுக்கான அங்குரார்ப்பண, வீதிகளின் திறப்பு நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 11 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்,எஸ்.எம்.எம்.றம்ஸான்)


அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது, கல்முனை ஆகிய பிரதேசங்களில் புதிய வீதிகள் அங்குரார்ப்பண மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட வீதிகளை திறந்துவைக்கும் ஒரு நாள் வேலைத்திட்ட நிகழ்வுகள் தொடர்பான கலந்துரையாடல்  நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சாய்ந்தமருது பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள இதற்கான நிகழ்வுகளின்போது சாய்ந்தமருது ஒஸ்மான் வீதி, ஆஸ்பத்திரி வீதி, அல்ஹிலால் வீதி, மாவடி வீதி, கல்முனை பள்ளி வீதி, கடற்கரை பள்ளி வீதி ஆகியவற்றுக்கான வீதி அமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கல்முனை தொடக்கம் காரைதீவு வரை அமைக்கப்பட்ட கடற்கரையோர கொங்கிறீட்; வீதியும் சாஹிராக் கல்லூரி வீதியும் பாவனைக்காக திறந்துவிடப்படவுள்ளன.

கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வையின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில்   அமைச்சின் செயலாளர் ஏ.எம்.அன்சார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துல்கர் நயீம், பிரதேச செயலாளர்களான ஏ.எல்.எம்.சலீம், எம்.எம்.நௌபல், வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளர்கள், சாய்ந்தமருது பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .