2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

காட்டு யானைகளின் அட்காசத்தினால் உகந்த மலை ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் சிரமத்தில்

Super User   / 2012 ஜூன் 12 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

பொத்துவில் உகந்த மலை ஆலயத்தில் அண்மை காலமாக காட்டு யானைகளின் அட்காசத்தினால் ஆலய பகுதியிலுள்ள கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன் கோவிலுக்கு பக்தர்கள் செல்லமுடியாமல் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் உள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த பக்த அடியார்கள் சென்று தங்கி வழிபட்டு வரும் இந்த ஆலயமாகும் இருந்த போதும் அண்மைக் காலமாக காட்டு யானைகள் ஆலயத்தின் பகுதிக்குள் ஊடுருவி பக்தகர்களின் உணவு மற்றும் உடமைகளை சேதமாக்கி வருகின்றதுடன் ஆலயத்தின் பகுதியில் உள்ள தங்குமிடம் போன்ற கட்டிடங்களை தாக்கி சேதமாக்கியுள்ளது.

இதனால் பக்தர்கள்  தங்கி நின்று வழிபட முடியாமல் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றதால் பக்த அடியார்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து ஏதிர்வரும் யூலை மாதம் கதிர்காமத்துக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள் கடைசியாக இவ்ஆலயத்தில் தங்கிநின்று வழிபட்டு காடுகளின் ஊடாக கதிர்காமம் செல்வார்கள்.

இந்நிலையில் யானைகளின் அட்டகாசத்தினால் யாத்திரைகள் ஆலயத்தில் தங்கி நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவே இவ் ஆலய பிரதேசத்தில் யானைகளை ஊடுருவலை தடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .