2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கு தங்கத் தோடு அணிவிக்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஜூன் 16 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண் பிள்ளைகளுக்கு தங்கத் தோடுகளை அணிவிக்கும் உதவும் கரங்கள் அமைப்பினுடைய திட்டத்தின் ஆரம்ப வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை தமண பிரதேச செயலகத்துக்குட்பட்ட பக்குமுட்டியாவ சிங்கள வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

பக்குமுட்டியாவ சிங்கள வித்தியாலயத்தின் அதிபர் எச். சூரியாராச்சி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், உதவும் கரங்கள் அமைப்பின் தலைவரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.எச். பியசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் ஏழைப் பிள்ளைகளில் ஒரு தொகுதியினருக்கு தங்கத் தோடுகளை அணிவித்தார்.



You May Also Like

  Comments - 0

  • Thinagaran Saturday, 16 June 2012 07:49 PM

    அட... வித்தியாசமா இருக்கே..
    mp பியசேன, MGR வழியில் வந்தவராயிற்றே... தலைவர் இந்த மாதிரி எதையுமே செய்யலியே... அம்மா செய்தாங்க தானே... பரவாயில்ல நல்ல விசயம் தான். பாதுகாப்பு தான் பாதுகாப்பு இல்லாம இருக்கு... இன்னும் சாவு வீடுகளுக்கு பியசேன mp வருகிறாரா? அவர் கொஞ்சம் வித்தியாசமா தான் இருந்தார். நல்ல மனுசன நாற்காலி தின்னுடுச்சே...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .