2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

Kogilavani   / 2012 ஜூன் 16 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளரும் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் முன்னாள் அதிபருமான சாய்ந்தமருதைச் சேர்ந்த அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல் தான் சேமித்து வைத்த நூல்களை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்புச் செய்யும் நிகழ்வும் பல்கலைக்கழக நூலகத்தில் 'எஸ்.எச்.எம்.ஜெமீல் பிரத்தியேக நூலகம்' திறந்து வைக்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.முகம்மது இஸ்மாயில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  செயலாளர் நாயகமுமான எம்.ரி.ஹஸன் அலி, சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.நௌஸாத், பதிவாளர் எச்.அப்துல் சத்தார், நிதியாளர் எம்.குலாம் றசீட், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் உட்பட பலரும்  கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.மௌனகுரு சிறப்புரையாற்றினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .